News December 20, 2025
வேலூர்: தேங்காய் வியாபாரி மயங்கி விழுந்து பலி!

ஒடுகத்தூரை சேர்ந்தவர் மாய கிருஷ்ணன் (50). இவர் தோப்புகளை குத்தகை எடுத்து தேங்காய் வியாபாரம் செய்து வந்தார். பள்ளிகொண்டா சின்னகருங்காலியில் உள்ள தென்னந்தோப்பில் நேற்று திடீரென மயங்கி விழுந்துள்ளார். உடனே அங்கிருந்தவர்கள் மாய கிருஷ்ணனை குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். பள்ளிகொண்டா போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News December 25, 2025
வேலூரில் 25% மானியத்துடன் ரூ.10 லட்சம் கடன்!

வேலூர் பெண்களே.. யாரையும் எதிர்பார்க்காமல் சுயமாக சம்பாதித்து முன்னேற ஆசையா? உங்களுக்காக ‘ தமிழ்நாடு பெண்கள் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம்’ கொண்டுவரப்பட்டுள்ளது. இதில், அதிகபட்சம் 25% (ரூ.2 லட்சம் வரை) மானியத்துடன், ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் இங்கு <
News December 25, 2025
வேலூர்: POLICE லஞ்சம் கேட்டால் உடனே CALL!

வேலூர் மக்களே.. போலீஸ், தாசில்தார், MLA, கவுன்சிலர் போன்ற அரசு தொடர்புடைய ஊழியர்கள் தங்களது வேலைகளை முறையாக செய்யாமல் உங்களிடம் லஞ்சம் கேட்டால் கவலை வேண்டாம். இது குறித்து வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியிடம் (0416-2220893) புகாரளிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணுங்க!
News December 25, 2025
வேலூர்: வீடு புகுந்து நகை, கிறிஸ்துமஸ் துணிகள் திருட்டு!

குடியாத்தம் பகுதியைச் சேர்ந்தவர் டி.மோகன். பேரணாம்பட்டில் உள்ள தனியார் பள்ளியில் உதவியாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று இவரது வீட்டில் பீரோவில் இருந்த இரண்டரை பவுன் நகை, வெள்ளி கொலுசு மற்றும் பட்டுப்புடவைகள், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வாங்கிய புது துணிகள் ஆகியவை திருட்டு போயிருப்பதை கண்டு திடுக்கட்டார். இந்த திருட்டு சம்பவம் குறித்து குடியாத்தம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


