News December 20, 2025
விரிஞ்சிபுரம்: கார் கவிழ்ந்து பெண் பலி

வேலூர், மாவட்டம் ரெட்டியூரை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி சத்யா, மகள் கஸ்தூரி. மஞ்சள் காமாலைக்கு சிகிச்சை எடுப்பதற்காக தாயும் மகளும் ராணிப்பேட்டைக்கு நேற்று இரவு காரில் சேலத்தில் இருந்து புறப்பட்டனர். இன்று காலை விரிஞ்சிபுரம் அருகே வந்தபோது, சாலை தடுப்பில் மோதி கார் கவிழ்ந்தது. இதில் சத்யா சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து விரிஞ்சிபுரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News January 2, 2026
வேலூர்: திருமணத் தடைகள் நீங்க இங்கு போங்க!

வேலூர் மாவட்டத்தில் உள்ள வள்ளிமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், 2026-லும் முருகப் பெருமான் வள்ளியை மணம் புரிந்த புனிதத் தலமாகத் திகழ்கிறது. இத்தலம் திருமணத் தடைகளை நீக்கி, கர்ம வினைகளைத் தீர்க்கும் மகாசக்தி கொண்டது. சித்தர்கள் தவம் புரிந்த இக்குகைக்கோயில், பக்தர்களுக்குப் பேரமைதியையும் காரிய வெற்றியையும் வழங்குகிறது.
News January 2, 2026
வளத்தூர் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் கலெக்டர் தகவல்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியத்துக்கு உட்பட்ட வளத்தூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் நாளை (ஜனவரி 03) நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம் காலை 8 மணி முதல் 4 மணி வரை நடைபெற உள்ளது. இதில் 17 சிறப்பு மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழுவினர் கலந்து கொள்ள உள்ளனர். எனவே பொதுமக்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.
News January 2, 2026
வேலூர்: வேலை தேடுபவரா? வேலை ரெடி! CLICK

வேலூர் மக்களே, பெடரல் பேங்க் வங்கிகளில் அலுவலக உதவியாளர்கள் (Office Assistanat) பணிக்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக, ரூ.19,500 – ரூ.37,815 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள், வரும் ஜன.08ம் தேதிக்குள் இந்த லிங்கை <


