News December 20, 2025
தாராபுரத்தில் வசமாக சிக்கிய நபர்: அதிரடி கைது!

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து போலீசார், தாராபுரம் பொள்ளாச்சி ரோடு அருண் பேக்கரி அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்ற நபரை பிடித்து விசாரித்தனர். அவர் பல்லடம் பகுதியில் வசிக்கும் பீகாரை சேர்ந்த அஜய் சஹானி (37) என்பது தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்த சுமார் 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர்.
Similar News
News January 5, 2026
திருப்பூர்: ரூ.1,20,940 சம்பளத்தில் BANK வேலை! APPLY

திருப்பூர் மக்களே, பேங்க் ஆப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள 514 Credit Officers பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 25 – 40 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் <
News January 5, 2026
POWER CUT: திருப்பூரில் இங்கு மின்தடை அறிவிப்பு

திருப்பூர் மாவட்டத்தில் இன்று (05.01.2026) மின்தடை ஏற்படும் பகுதிகள்: உடுமலை பகுதியில் தேவனூர்புதூர், செல்லம்பாளையம், கரட்டூர், ராவணபுரம், ஆண்டியூர், பாண்டியங்கரடு, அரிசனம்பட்டி, வல்லகுண்டபுரான், எஸ்.நல்லூர், அர்த்தநாரிபாளையம், புங்கமுத்தூர், வளையபாளையம், தீபாலபட்டி ஆகிய பகுதிகள் காலை 9 மணி முதல் 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. (SHARE)
News January 5, 2026
திருப்பூரில் பெண் உட்பட 4 பேர் கைது

திருப்பூர் மத்திய பேருந்து நிலையம் அருகே தெற்கு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக வந்த வாகனத்தை சோதனை செய்த போது அதில் கஞ்சா பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து கதிர்வேல், கோகுலகண்ணன், ஹரிகுமார் மற்றும் பெண் உட்பட 4 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.


