News April 30, 2024
மரங்களை அகற்றுவது தேவைதானா?

பசுமைச் சூழ்ந்த கோவையின் அடையாளங்களில் ஒன்றான பொள்ளாச்சி – ஆனைமலை சாலை மிகவும் பிரபலமானது. இந்நிலையில், சாலை விரிவாக்கத்துக்காக அங்குள்ள மரங்களை அகற்ற நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்துள்ளது. புவி வெப்பமயமாதல் உள்ளிட்ட காரணிகளால் கோவையில் வெயில் 2-3 டிகிரி அதிகரித்துள்ள சூழலில், மரங்களை அகற்றுவது தேவைதானா? என சூழலியல் ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
Similar News
News August 15, 2025
மானியத்துடன் கடன் வேண்டுமா?.. இதை பண்ணுங்க

புதிய தொழில்முனைவோர்களை உருவாக்க நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் மையம் (District Industries Centre – DIC) உருவாக்கப்பட்டுள்ளது. அங்குள்ள மேனேஜரை அணுகி தொழில் தொடங்க வங்கிகள் மூலம் மானியத்துடன் கடன் பெறலாம். நாம் தொடங்கும் தொழிலை பொறுத்து ₹10 லட்சம் முதல் அதிகபட்சமாக ₹5 கோடி வரை கடன் பெறலாம். உதாரணமாக, ₹10 லட்சம் கடன் பெற்றால் அதில் மானியமாக ₹3.5 லட்சத்தை அரசே செலுத்தும். SHARE IT
News August 15, 2025
பள்ளியில் ஆபாசப் படம்… மாணவர்கள் அதிர்ச்சி

ம.பி.,யில் பள்ளி ஒன்றில் ஆபாசப் படம் காட்டப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வகுப்பறையின் LED திரையில் திடீரென ஆபாசப்படம் ஒளிபரப்பாகியுள்ளது. அப்போது 13 மாணவர்கள் இருந்துள்ளனர். ஒருவர் அதை போனில் ரெக்கார்ட் செய்ய, அது சோஷியல் மீடியாவில் வைரலாகிவிட்டது. இது 6 மாதங்களுக்கு முன் நடந்ததாகவும், விஷமி ஒருவர் இதை பரப்பியதாகவும் பள்ளி தரப்பில் கூறினாலும், நடந்தது சாதாரண தவறில்லையே?
News August 15, 2025
சாதனை தாய் மறைந்தார்

அமேசான் நிறுவனரும் உலகின் பெரும் கோடீஸ்வரருமான ஜெப் பெசோஸின் தாய் ஜாக்கி பெசோஸ்(78) காலமானார். முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிய, கடைசியாக தான் ஆரம்பித்த ஸ்டார்ட்-அப் நிறுவனத்தையும் ஜெப் மூட முடிவெடுத்தபோது, இதோ நாங்கள் இருக்கிறோம் என்று கூறி, தங்கள் வாழ்நாள் சேமிப்பு மொத்தத்தையும் மகனுக்கு கொடுத்தனர் ஜாக்கி தம்பதி. இன்று உலகை ஆளும் நிறுவனமாக அமேசான் வளர்ந்து நிற்க அதுவே மூலதனமானது.