News April 30, 2024
இனி உரிமைச் சான்று கட்டாயம்

வெளிநாட்டு உயிரினங்களை வைத்திருப்போரும், வாங்குவோரும், இணையதளத்தில் பதிவு செய்து உரிமைச் சான்று பெறுவது கட்டாயம் எனத் தமிழக வனத்துறை அறிவித்துள்ளது. இதனை, ‘பரிவேஷ் 2.0’ இணையதளத்தில் பதிவு செய்து, உரிமைச் சான்று பெற வேண்டும். உரிமையாளர் தான் வைத்திருக்கும் உயிரினத்திற்கு 6 மாதங்களுக்கு ஒருமுறை கால்நடை மருத்துவரிடம் பரிசோதனை செய்து, விவரங்களை இணையத்தில் பதிவேற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News August 15, 2025
நான் ஒரு சுவர் போல நேராக நிற்பேன்: PM உறுதி

விவசாயிகள், மீனவர்கள் நலனில் இந்தியா ஒருபோதும் சமரசம் செய்யாது என அமெரிக்க வரிவிதிப்பை PM மோடி எதிர்த்துள்ளார். நான் சுவர் போல் நேராக நிற்பேன், வளைந்து கொடுக்க மாட்டேன் என டிரம்ப்பை அவர் மறைமுகமாக சாடியுள்ளார். மேலும், நமது தேவைகளுக்காக பிற நாடுகளை சார்ந்திருப்பது என்பது அழிவுக்கான சான்று எனவும், தற்சார்பே நமது தேச நலனை காக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
News August 15, 2025
மானியத்துடன் கடன் வேண்டுமா?.. இதை பண்ணுங்க

புதிய தொழில்முனைவோர்களை உருவாக்க நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் மையம் (District Industries Centre – DIC) உருவாக்கப்பட்டுள்ளது. அங்குள்ள மேனேஜரை அணுகி தொழில் தொடங்க வங்கிகள் மூலம் மானியத்துடன் கடன் பெறலாம். நாம் தொடங்கும் தொழிலை பொறுத்து ₹10 லட்சம் முதல் அதிகபட்சமாக ₹5 கோடி வரை கடன் பெறலாம். உதாரணமாக, ₹10 லட்சம் கடன் பெற்றால் அதில் மானியமாக ₹3.5 லட்சத்தை அரசே செலுத்தும். SHARE IT
News August 15, 2025
பள்ளியில் ஆபாசப் படம்… மாணவர்கள் அதிர்ச்சி

ம.பி.,யில் பள்ளி ஒன்றில் ஆபாசப் படம் காட்டப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வகுப்பறையின் LED திரையில் திடீரென ஆபாசப்படம் ஒளிபரப்பாகியுள்ளது. அப்போது 13 மாணவர்கள் இருந்துள்ளனர். ஒருவர் அதை போனில் ரெக்கார்ட் செய்ய, அது சோஷியல் மீடியாவில் வைரலாகிவிட்டது. இது 6 மாதங்களுக்கு முன் நடந்ததாகவும், விஷமி ஒருவர் இதை பரப்பியதாகவும் பள்ளி தரப்பில் கூறினாலும், நடந்தது சாதாரண தவறில்லையே?