News December 20, 2025

ஈரோடு மாவட்ட இரவு ரோந்து காவலர் விவரம்!

image

ஈரோடு மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும். அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

Similar News

News December 26, 2025

ஈரோடு: gpay, phonepay வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

டிஜிட்டல் யுகத்தில், UPI பரிவர்த்தனை பிரபலமாக உள்ளது. தவறுதலாகப் பணம் அனுப்பிவிட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!

News December 26, 2025

சென்னிமலையில் வசமாக சிக்கிய இருவர்!

image

சென்னிமலை – அரச்சலூர் சாலையில் கார் சோதனையின் போது, புகையிலை பொருட்களைக் கடத்தி வந்த ஈரோட்டைச் சேர்ந்த அப்துல்லா மற்றும் நாகராஜனை போலீசார் கைது செய்தனர். மளிகைக் கடைகளில் விற்பனை செய்ய இவை கொண்டு வரப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து கார் மற்றும் கடத்தல் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யதனர். மேலும் இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை!

News December 26, 2025

அந்தியூர் மயங்கி விழுந்த பெயிண்டர் உயிரிழப்பு!

image

அந்தியூர் தவிட்டுபாளையம் நஞ்சப்பா தெருவை சேர்ந்தவர் லோகநாதன். பெயிண்டரான இவருக்கு மது அருந்தும் பழக்கம் உண்டு. இவர் நேற்று தவிட்டுபாளையம் பகுதியில் மயங்கி விழுந்தார். இவரை பொதுமக்கள் மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக அந்தியூர் காவல் துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!