News December 20, 2025
அஜித் குமார் மரணம்.. பரபரப்பான புதிய தகவல்

தமிழகத்தை உலுக்கிய அஜித் குமார் கொலை வழக்கில் 10 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், காவலர்கள் ராஜா & பிரபு ஆகியோர் ஜாமின் கோரி மதுரை HC அமர்வில் மனுதாக்கல் செய்துள்ளனர். அதில், தங்களுக்கும் இதற்கும் தொடர்பில்லாத நிலையிலும் 168 நாள்களுக்கும் மேலாக சிறையில் உள்ளதால் ஜாமின் வழங்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர். இதனை விசாரித்த HC, இதுதொடர்பாக CBI பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
Similar News
News December 21, 2025
வாரிசுகளுக்கு சீட் கேட்கும் திமுக சீனியர்கள்

வரும் தேர்தலில் வாரிசுகளுக்கு சீட் வேண்டும் என்ற டிமாண்ட் உடன் திமுக தலைமைக்கு சீனியர்கள் நெருக்கடி கொடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் தி.மலையில் நடந்த இளைஞரணி மாநாட்டில், 2026 தேர்தலில் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பளிக்க வேண்டும் என்று ஸ்டாலினிடம் உதயநிதி கோரிக்கை விடுத்தார். உதயநிதியின் வியூகத்தை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்ட சீனியர்கள் வாரிசுகளுக்கு சீட் கேட்கிறார்களாம்.
News December 21, 2025
பெண்களுக்கு ₹1,200 தரும் அரசு திட்டம்!

இந்திரா காந்தி தேசிய விதவை ஓய்வூதிய உதவித்தொகை திட்டம் மூலம் கணவனை இழந்து வாடும் பெண்களுக்கு மாதந்தோறும் ₹1,200 ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்கும் பெண்களின் வயது 60-க்குள் இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ₹1 லட்சத்திற்கும் அதிகமாக இருக்கக்கூடாது. கிராம பஞ்சாயத்து (அ) மாநகராட்சி அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பியுங்கள். UMANG ஆப் மூலம் ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம். SHARE.
News December 21, 2025
ஒருவர் மூழ்கி விட்டார்.. ஒருவர் கரையை கடந்துவிட்டார்

T20I WC-க்கான அணியில் இருந்து கில் நீக்கப்பட்டது விவாதத்தை கிளப்பியுள்ளது. நீக்கத்துக்கு அவரின் ஃபார்ம் சுட்டிக்காட்டப்படும் நிலையில், ஃபார்மில் இல்லாத கேப்டன் SKY மீதும் விமர்சனங்கள் அதிகரித்துள்ளன. இதுகுறித்து பேசிய இர்பான் பதான், இருவருமே ஃபார்மில் இல்லை. ஆனால் ஒருவர் மூழ்கிவிட்டார், ஒருவர் கரையை கடந்துவிட்டார் என விமர்சித்துள்ளார். கில் நீக்கப்பட்டது சரியான முடிவா?


