News December 19, 2025

JUST IN: திருவாரூர் மாவட்டத்தில் 1,29,480 வாக்காளர்கள் நீக்கம்

image

திருவாரூர், வாக்காளர் சிறப்பு திருத்த பட்டியல் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் மோகனசுந்தரம் வெளியிட்டுள்ளார். அதன்படி வாக்காளர் பட்டியலில் 10,75,577 வாக்காளர்கள் திருவாரூர் மாவட்டத்தில் இருந்த நிலையில், 9,46,097 பேர் வெளியிடப்பட்ட அறிக்கையில் வாக்காளர்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளனர். இதில் 1,29,480 12.03% பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

Similar News

News December 26, 2025

திருவாரூர்: டிச.31 கைரேகை பதிவு செய்ய அறிவுறுத்தல்!

image

திருவாரூர் மாவட்டம் முழுவதும் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, தங்கள் குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினர்கள் அனைவரும், ரேஷன் கடையில் கைரேகை பதிவு செய்யாதவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அல்லது தங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகாமையில் உள்ள எதாவது ஒரு ரேஷன் கடையில் டிச.31-ம் தேதி கைரேகை பதிவு செய்யுமாறு ரேஷன் கடை விற்பனையாளர்கள் சார்பில் கூறப்பட்டுள்ளது.

News December 26, 2025

திருவாரூர்: கணவர் இறந்ததால் மனைவி தற்கொலை

image

நீடாமங்கலம் அருகே குடிதாங்கிச்சேரியைச் சேர்ந்தவர் சுதாகர். இவருடைய மனைவி சித்ரா (40). சுதாகர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார். இதனால் சித்ரா மன வேதனையில் இருந்துள்ளார். இந்த நிலையில், சித்ரா தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை அடுத்து அவர் சிகிச்சைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

News December 26, 2025

திருவாரூர்: ரோந்து பணி காவலர்கள் அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில், இன்று (டிச.25) இரவு 10 மணி முதல், காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!