News December 19, 2025

BREAKING விருதுநகரில் 1,89,964 வாக்காளர்கள் நீக்கம்

image

விருதுநகர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நவ.4 அன்று தொடங்கி டிச.14 வரை நடைபெற்றது. இதனையடுத்து சற்றுமுன் வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா வெளியிட்டார். இதில் 7 சட்டமன்ற தொகுதிகளில் 16,26,485 வாக்காளர்கள் இருந்த நிலையில் SIR க்கு பின்னர் வாக்காளர்களின் எண்ணிக்கை ஆக 14,36,521 ஆக உள்ளது. இதில் 1,89,964 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

Similar News

News December 24, 2025

சிவகாசி: பெண் பட்டாசு தொழிலாளி மீது தாக்குதல்

image

சிவகாசி பள்ளபட்டி சாலையை சேர்ந்தவர் சேசுராஜ்- சத்யா (30) தம்பதி. பட்டாசு தொழிலாளர்களான இருவரும் வீட்டில் இருந்துபோது கருப்பசாமி என்பவர் வீட்டிற்குள் செல்போன் டார்ச்லைட் அடித்துள்ளார். இதனை இருவரும் கண்டித்துள்ளனர். இந்நிலையில் சத்யா வீட்டில் தனியாக இருந்த போது அங்கு வந்த கருப்பசாமியின் மனைவி பஞ்சம்மாள், திருப்பதி(பெண்) இருவரும் சத்யாவை கம்பால் தாக்கினர். 2 பெண்கள் மீது போலீஸ் வழக்குப்பதிவு.

News December 24, 2025

விருதுநகர் மாவட்ட தீயணைப்பு துறை எண்கள்

image

அருப்புகோட்டை – 04566 240101
ராஜபாளையம் – 04563 220101
சாத்தூர் – 04562 264101
சிவகாசி – 04562 220101
ஸ்ரீ வில்லிபுத்தூர் – 04563 265101
திருச்சுழி – 04566 282101
வத்திராயிருப்பு – 04563 288101
விருதுநகர் – 04562 240101
காரியாபட்டி – 04566 255101
ஏழாயிரம்பண்ணை – 04562 226101
வெம்பகோட்டை – 04562 284101
*ஷேர் பண்ணுங்க

News December 24, 2025

விருதுநகர்: தம்பியை பீர் பாட்டிலால் தாக்கிய அண்ணன்

image

சிவகாசி அருகே ரிசர்வ்லைன் நேருஜிநகரை சேர்ந்தவர் பாலன் மகன் நாகராஜ் (25) இவருக்கும் இவரது அண்ணன் பாலமுருகன் (27) என்பவருக்கும் குடும்பத்தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் நாகராஜனிடம் தகராறு செய்த பாலமுருகன் அவரை காலி பீர் பாட்டிலால் தலையில் தாக்கியுள்ளார். இதில் நாகராஜனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. பாலமுருகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!