News December 19, 2025
ராமநாதபுரம் கலெக்டர் அறிவிப்பு

மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் ராமநாதபுரம் நேஷனல் அகாடமி மெட்ரிக்., பள்ளி வளாகத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம் டிச.24 ( புதன் கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் பங்கேற்று பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 25, 2025
இராமநாதபுரம் மன்னரால் வாங்கப்பட்ட விமானம்

ராஜ ராஜேஸ்வர சேதுபதியின் ஆட்சியின் போது இரண்டாம் உலகப்போர் நடைபெற்று வந்தது. அந்த சமயத்தில் அவர் ராமநாதபுரம் சீமை இளைஞர்களை ராணுவத்தில் சேருமாறு அறிவுறுத்தியதோடு ரூ.பல லட்சம் மதிப்பில் அரசுக்கு “இராம்நாட்” என்ற பெயரில் ஒரு விமானத்தை கொடையாக கொடுத்துள்ளார். மேலும் இராஜ ராஜேஸ்வர சேதுபதி,போர்க்கால நிதியுதவிக்காக பல லட்சங்களை வழங்கியது வரலாற்றில் இடம் பெற்றுள்ளது. SHARE
News December 25, 2025
இராம்நாடு: வீட்டின் மாடியில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது

வாலிநோக்கம் அருகே உள்ள தத்தங்குடி கிராமத்தை சேர்ந்த கணேசன் மகன் சின்னதுரை(எ)சதீஷ்குமார் (20) என்பவர் கஞ்சா செடி வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவல் படி, வாலிநோக்கம் காவல் ஆய்வாளர் லட்சுமி, சார்பு ஆய்வாளர் ரத்தினவேல் ஆகியோர்கள் சென்று அவரது வீட்டை சோதனை செய்ததில் வீட்டின் மொட்டை மாடியில் கஞ்சா செடி வளர்த்து அதனை பிடுங்கி வைத்திருந்ததை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News December 24, 2025
ராமநாதபுரம் மாவட்டத்தில் 50 பேர் மீது குண்டாஸ்.!

தேவிபட்டினத்தில் 4 பேரை கொல்ல முயன்ற சரத்குமார் மீது தேவிபட்டினம் போலீஸ் வழக்கு பதிந்து, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர். இவர் தொடர்ந்து சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதை தடுக்கும் பொருட்டு எஸ்.பி சந்தீஷ் பரிந்துரைபடி கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் சரத்குமாரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் அடைக்க உத்தரவிட்டார். நடப்பாண்டில் இதுவரை மாவட்டத்தில் 50 பேர் குண்டாஸில் கைது செய்யப்பட்டுள்ளனர்.


