News December 19, 2025
புதுச்சேரி: சட்டசபை முற்றுகை-மா.கம்யூ அறிவிப்பு

புதுவை போலி மருந்து விவகாரத்தை கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஜன.5-ம் தேதி சட்டசபை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன், “போலி மருந்து ஊழலை கண்டித்து வரும் ஜனவரி 5-ம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சட்டசபையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும்.” என உறுதிசெய்துள்ளார்.
Similar News
News January 1, 2026
புதுச்சேரி: 2025 மறக்க முடியாத நிகழ்வுகள்

புதுச்சேரியில் கடந்த 2025-ம் ஆண்டு நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள்:
1. ரெயின்போ நகர் மூவர் கொலை
2. பாஜக நிர்வாகி உமாசங்கர் கொலை
3. மதுபான விடுதியில் இளைஞர் அடித்துக் கொலை
4. லாஸ்பேட்டை காவல் நிலையம் அருகே கொலை
5. ரஞ்சி கோப்பை மற்றும் சையத் முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட் போட்டி
6. ரேஷன் கார்டு தாரர்களுக்கு கூடுதல் கோதுமை
உங்கள் பகுதியில் நடைபெற்ற மறக்க முடியாத நிகழ்வுகளை கமெண்ட் பண்ணுங்க.
News January 1, 2026
புதுச்சேரி: கேஸ் புக்கிங் செய்ய புது அறிவிப்பு!

புதுச்சேரி மக்களே, கேஸ் புக்கிங் -ல் கள்ளச் சந்தையை தடுக்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் இ-கேஒய்சி மற்றும் ஓடிபி கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இ-கேஒய்சி இல்லையென்றால் கேஸ் புக்கிங் செய்ய முடியாது.
பாரத் கேஸ் : https://www.ebharatgas.com
இண்டேன் கேஸ்: <
ஹெச்.பி: https://myhpgas.in
கேஸ் எண் மற்றும் ஆதார் எண்ணை பதிவு செய்து e-KYC – ஐ உருவாக்குங்க. SHARE!
News January 1, 2026
புதுவை: உங்க குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000 வேண்டுமா?

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும், பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க…


