News December 19, 2025
ஊராட்சி இணைப்பு குறித்து கருத்து தெரிவிக்கலாம் – ஆட்சியர்

கன்னியாகுமரி மாவட்டத்தில் குறைந்த பரப்பளவு மற்றும் மக்கள் தொகை கொண்டுள்ள பாலமோர் ஊராட்சியை சுருளகோடு ஊராட்சியுடன் இணைத்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது. மேற்படி, மறுசீரமைப்பு தொடர்பாக கருத்துக்கள் இருப்பின் டிச.27ம் தேதிக்குள் கன்னியாகுமரி மாவட்ட ஊரக வளர்ச்சி இயக்குநர் (ஊராட்சிகள்) அலுவலகத்தில் கருத்து தெரிவிக்கலாம் என குமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா இன்று (டிச.19) தகவல் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 25, 2025
குமரி: ரயில் மீது கல் வீசிய சிறுவன் கைது

காந்திதாம் – திருநெல்வேலிக்கு வாரம் ஒரு முறை இயக்கப்படும் ஹம்சபர் ரயில் நாகர்கோவில் டவுன் ரயில் நிலையம் அருகே வந்த போது 16 வயது சிறுவன் ஒருவன் ரயில் பெட்டி மீது கல் வீசியதாக கூறப்படுகிறது. இது குறித்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த சிறுவனை கைது செய்தனர். பின்னர் அந்த சிறுவன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு நெல்லையில் உள்ள சிறார் பள்ளியில் சேர்க்கப்பட்டார்.
News December 25, 2025
குமரி: விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை!

கொடுப்பைக்குழி கட்டிடத்தொழிலாளி சந்திரன் (50). திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். இவர் கடந்த சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன் தினம் மாலை விஷம் குடித்துவிட்டு மயங்கி கிடந்துள்ளார். அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து இரணியல் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.
News December 25, 2025
குமரி: இனி வரிசைல நிக்காதிங்க.. எல்லாமே ONLINE..!

குமரி மக்களே, இனி நீங்க வீட்டு வரி, குடிநீர் வரி, தொழில் வரி, பிறப்பு/இறப்பு சான்றிதழ் பதிவு போன்ற பல்வேறு அரசு சேவைக்காக அலுவலகத்துக்கு போய் நீண்ட நேரம் வரிசைல நின்னு காத்திருக்க வேண்டிய அவசியமே இல்லை. இனி நீங்க இங்கு<


