News December 19, 2025
கடலூர்: ஆட்டோ வாங்க ரூ.3 லட்சம் கடன் உதவி

கடலூர் மக்களே, தமிழக அரசு சார்பில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மகளிருக்கு மின்சார ஆட்டோ வாங்க கூட்டுறவு வங்கிகள் மூலமாக ரூ.3 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்படுகிறது. அதன்படி நடப்பாண்டில் 1,000 பேருக்கு ஆட்டோ வாங்க கடன் வழங்கப்படவுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க வாகன விலை விவர அறிக்கை, வருமானச் சான்று, ஆதார், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களுடன் உங்களுக்கு அருகில் உள்ள கூட்டுறவு வங்கிகளை அணுகலாம்.
Similar News
News January 5, 2026
கடலூர்: ரூ.5 லட்சம் இலவச காப்பீடு – Apply பண்ணுங்க!

கடலூர் மக்களே.. முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இத்திட்டத்தைப் பெற, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.!
News January 5, 2026
சமூகவலைதள செய்திக்கு எஸ்பி மறுப்பு

சிதம்பரம் நடராஜர் கோவிலில் கருவறைக்குள் நுழைந்து பாலை எடுத்து உடம்பில் ஊற்றிக் கொண்டு கடவுள் இல்லை என்று கூச்சலிட்ட அரியலூரை சேர்ந்த மணிகண்டன்(35) என்பவரை கைது செய்து விசாரித்ததில் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது. அவரை உறவினரிடம் ஒப்படைத்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், நடவடிக்கை எடுக்கவில்லை என சமூக வலைதளங்களில் பொய்யான தகவல் பரவி வருவதாகவும் எஸ்.பி ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
News January 5, 2026
கடலூர்: சிலிண்டர் மானியம் வருதா? CHECK IT

கூகுளில் <


