News December 19, 2025
திருச்சி: ஆடு மேய்த்த மூதாட்டிக்கு நேர்ந்த சோகம்!

லால்குடி அருகே கீழ மணக்கால் கிராமத்தை சேர்ந்தவர் மருதம்பாள் (78). இவர் சம்பவத்தன்று லால்குடி – அன்பில் சாலையில் கீழ மணக்கால் பஸ் நிறுத்தம் அருகே ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக அதவத்தூர் பகுதியை சேர்ந்த மதிவாணன் (39) என்பவர் ஓட்டி வந்த டூவீலர் மருதம்பாள் மீது மோதியதில், பலத்த காயமடைந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிந்த லால்குடி போலீசார் மணிவாணனை கைது செய்தனர்.
Similar News
News January 18, 2026
திருச்சி : தமிழ் தெரியுமா? ரிசர்வ் வங்கியில் வேலை ரெடி!

இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள ‘572’ அலுவலக உதவியாளர் பணிகளை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10=ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். இதற்கு சம்பளமாக ரூ.24,250 – ரூ.53,330 வரை வழங்கப்படும். தமிழக பணியிடங்களுக்கு தமிழ் தெரிந்திருப்பது கட்டாயம். விருப்பமுள்ளவர்கள் <
News January 18, 2026
திருச்சி: கோளரங்கத்தில் திறனறித் தேர்வு

திருச்சி அண்ணா அறிவியல் மையம் மற்றும் கோளரங்கத்தில், 9 மற்றும் 10 வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் திறனறித் தேர்வானது வரும் ஜன.26-ம் தேதி காலை 11 மணியளவில் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் வரும் 20-ம் தேதிக்குள் தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம். இதுகுறித்த விவரங்களுக்கு 0431-2332190 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என திட்ட இயக்குனர் அகிலன் தெரிவித்துள்ளார்.
News January 18, 2026
திருச்சி: கூட்டு பட்டா, பட்டாவில் சிக்கலா?

உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்தால் அதற்கு தனிப் பட்டா பெற நிலத்தை பகிர்ந்து தனியாக மாற்ற வேண்டும். பின்னர் கூட்டு பட்டா, விற்பனை சான்றிதழ், நில வரைபடம், சொத்து வரி ரசீது, மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதம் ஆகியவற்றுடன் தாலுகா அலுவலகம் (அ) இ-சேவை மையத்தில் விண்ணப்பிக்க வேண்டும். நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்த பிறகு தனி பட்டா கிடைத்துவிடும். அனைவருக்கும் SHARE செய்யுங்க.


