News December 19, 2025

பெரம்பலூர்: 75 நாட்களில் 1.5 லட்சம் திட்டம்!

image

பெரம்பலூர் மாவட்டம், எறையூர் பகுதியில், ஜவஹர்லால் நேரு பொதுத்துறை சர்க்கரை ஆலை உள்ளது. சர்க்கரை ஆலையின் தலைமை நிர்வாகியான, டிஆர்ஓ பன்னீர்செல்வம் தலைமையில் நடப்பு (2025-2026) ஆண்டுக்கான அரவைப் பணிகளுக்காக ஆலை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சர்க்கரை ஆலையில் இன்று முதல் அரவைப் பணிகள் தொடங்கவுள்ள சூழலில், 75 நாட்களில் சுமார் 1.5 லட்சம் டன் கரும்புகளை அரைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

Similar News

News December 27, 2025

பெரம்பலூர்: விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம்

image

பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகளுக்கான விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம், இன்று (26.12.2025) பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி முன்னிலையில் நடைபெற்றது. இந்த குறைதீர்க்கினால் கூட்டத்தில் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

News December 26, 2025

பெரம்பலூர்: திருமண தடையா? கவலை வேண்டாம்!

image

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சிறுவாச்சூர் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற மதுரகாளியம்மன் திருக்கோயில், திருமணத் தடை நீக்கும் பரிகாரத் தலமாக விளங்குகிறது. இத்திருக்கோயிலில் அருள்பாலித்து வரும் மூலவரான மதுரகாளியம்மனுக்கு, அபிஷேகம் செய்து தீபம் ஏற்றி வழிபட்டால், திருமணம் கைகூடும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. திருமணம் ஆகாத உங்கள் நண்பர்களுக்கு இதனை ஷேர் பண்ணுங்க!

News December 26, 2025

பெரம்பலூர்: வாக்காளர் பட்டியல் முகாம் அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் SIR கணக்கெடுப்பு பணிக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்டதில், பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் 387 வாக்குசாவடி மையமும், குன்னம் சட்டமன்ற தொகுதியில் 345 வாக்குசாவடி மையமும் உள்ளது. இதில் முதற்கட்டமாக டிசம்பர் 27,28 ஆகிய தினங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

error: Content is protected !!