News December 19, 2025
வாழப்பாடி அருகே கண்டெடுக்கப்பட்ட அதிசயம்!

சேலம் மாவட்டம் வாழப்பாடி, நீர்முள்ளிக்குட்டை பகுதியை சேர்ந்த மாரிமுத்து, இவர் தனது விளைநிலத்தில் குழி தோண்டிய போது, பழங்காலத்து கல் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த வரலாற்று ஆய்வாளர்கள் கூறியதாவது, 9ம் நூற்றாண்டில் ஆத்தூர் பகுதியில் ஆட்சி செய்த இராமாடிகள் என்னும் குறுநில மன்னர் காலத்தில் உருவாக்கப்பட்ட நடுகல் என தெரிவித்துள்ளனர். நம்ம ஊர் வரலாற்றை எல்லாருக்கும் ஷேர் பண்ணுங்க!
Similar News
News January 13, 2026
சேலம் அருகே கூண்டோடு விலகிய நிர்வாகிகள்!

சேலம் மாவட்டம், காடையாம்பட்டி கிழக்கு ஒன்றியம், கணவாய்புதூர் பஞ்சாயத்திற்கு உட்பட்ட ஜாலிகொட்டாய் பகுதியில் நேற்று தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) முக்கியக் கலந்தாய்வு மற்றும் இணைவு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், பல்வேறு கட்சிகளில் இருந்து விலகிய நிர்வாகிகள் தவெவில் தங்களை இணைத்துக் கொண்டனர். புதிய உறுப்பினர்களைத் தவெக நிர்வாகிகள் துண்டு அணிந்து வரவேற்றனர்.
News January 13, 2026
சேலத்தில் ஷாக்: ஆசனவாயில் காற்று செலுத்திய வாலிபர்

சேலம் அம்மாபேட்டை தறிப்பட்டறையில் பணியாற்றும் ஒடிசா வாலிபர் சுசான்தாஸ் (26), நேற்று இயந்திரம் சுத்தம் செய்யும் ஏர்டியூப் மூலம் விளையாட்டுத்தனமாகத் தனது ஆசனவாயில் காற்றைச் செலுத்தியுள்ளார். இதனால் அவரது வயிற்றில் காற்று வேகமாக புகுந்து, பெரிதாகி வீக்கமடைந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சக ஊழியர்கள் அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்துள்ளனர்.
News January 13, 2026
கத்தியை காட்டி பொங்கல் போனஸ் கேட்ட நபர்

சேலம் குள்ளம்பட்டியைச் சேர்ந்த கூலி தொழிலாளி பாஸ்கர் காரியப்பட்டி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். அதில் வாழப்பாடி சேர்ந்த கந்தசாமி என்பவர் தன்னிடம் கத்தியை காட்டி மிரட்டி பொங்கல் போனஸ் கேட்டதாகவும் தர மறுத்ததால் கொலை செய்வதாக மிரட்டி பாக்கெட்டில் இருந்த ரூபாய் 300ஐ பறித்து சென்றதாகவும் தெரிவித்துள்ளார். விசாரணை மேற்கொண்ட போலீசார் கந்தசாமியை கைது செய்தனர்


