News December 19, 2025
கள்ளக்குறிச்சி: வெறிநாய்கள் கடித்து 7 ஆடுகள் பலி!

கள்ளக்குறிச்சி: வரதப்பனுார் காட்டுகொட்டாய் பகுதியை சேர்ந்தவர் ரங்கம்மாள் (35). இவர், நேற்று தனது நிலத்தில் மேய்ச்சலுக்காக 8 ஆடுகளை கட்டிவிட்டு சென்றார். அப்போது திடீரென வந்த 3 வெறி நாய்கள் ஆடுகளை கடித்து குதறின. இதில் 7 ஆடுகள் உயிரிழந்த நிலையில், 1 ஆடு படுகாயம் அடைந்தது. இதனால் மனமுடைந்த ரங்கம்மாள், அரசு சார்பில் நிவாரணத்தொகை வழங்க வேண்டுமென ரங்கம்மாள் கோரிக்கை விடுத்துள்ளார்.
Similar News
News January 10, 2026
கள்ளக்குறிச்சி: பிழைப்பு தேடி சென்ற இடத்தில் தற்கொலை!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பிரகாஷ் (34) என்பவர் திருவள்ளூர் போளிவாக்கம் பகுதியில் தங்கி, ஒரகடத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், பிரகாஷிற்கும், அவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மனைவி பிரிந்து சென்றார். இதனால், சோகத்தில் இருந்த அவர், தனது வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
News January 10, 2026
கள்ளக்குறிச்சி: அனைத்து CERTIFICATES-ம் இனி Whatsapp-ல்!

கள்ளக்குறிச்சி மக்களே.., பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. எங்கேயும் அலையாமல், வீட்டில் இருந்தே 7845252525 என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
News January 10, 2026
கள்ளக்குறிச்சியில் மழையால் மின்தடையா? உடனே CALL!

கள்ளக்குறிச்சி மக்களே.. சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நேரத்தில் மின்தடை தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டால் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். TNEB Customer Care எண்ணான 94987-94987-ஐ தொடர்புகொண்டு, மின் இணைப்பு எண் மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், லைன்மேன் வந்து சரிசெய்யவர். (அ) 9445850811 இந்த வாட்ஸ் ஆப் எண்ணிலும் புகார் செய்யலாம். SHARE IT!


