News December 19, 2025
தூத்துக்குடி: கார் மோதி பரிதாப பலி

தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சியை சேர்ந்தவர் எலக்ட்ரீசியன் வீரபொம்மு (55). இவர் நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து தனது டூவீலரில் பாஞ்சாலங்குறிச்சிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது கார் இவரது டூவீலரில் மோதியதில் இவர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் ஓட்டுநர் ராமசுப்பு என்பவரை நேற்று கைது செய்தனர்.
Similar News
News January 8, 2026
தூத்துக்குடி: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1.முதலில் <
2. பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்பதை க்ளிக் செய்து, உங்களுக்கான ID-ஐ உருவாக்க வேண்டும்.
3. இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4. பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க
News January 8, 2026
தூத்துக்குடி: வியாபாரி அடித்துக்கொலை.. 3 பேர் கைது

சாத்தான்குளம் அருகே முதலூரை சேர்ந்தவர் மார்ட்டின் (30). கார் வியாபாரியான இவர் நேற்று முன்தினம் நெல்லை சீவலப்பேரி அருகே சுடுகாட்டில் அடித்து கொலை செய்யப்பட்டு இருந்தார். இது தொடர்பாக நெல்லை போலீசார் மேற்கொண்ட விசாரணையில் உடையார்பட்டியை சேர்ந்த நம்பிராஜன் 31, பணகுடியை சேர்ந்த கிதியோன் 20, தோணித்துறையை சேர்ந்த முருகப்பெருமாள் 22 ஆகியோர் கொலை செய்தது தெரிந்தது. போலீசார் இவர்களை நேற்று கைது செய்தனர்.
News January 8, 2026
தூத்துக்குடி: பள்ளி சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை

காடல்குடி கிராமத்தை சேர்ந்த கருப்பசாமி என்பவரின் மகன் கருமுருகன் (25). இவர் விளாத்திகுளத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் பயின்று வரும் 9 வயது சிறுமி மற்றும் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, சிறுமிகளின் பெற்றோர் புகார் கொடுத்தனர். இந்த புகாரின் பேரில் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கருமுருகனை போக்ஸோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


