News December 19, 2025

தருமபுரி: தபால் வாடிக்கையாளர்கள் கூட்டம் அறிவிப்பு!

image

தர்மபுரி கோட்ட தபால் வாடிக்கையாளர் குறைதீர்க்கும் கூட்டம் வரும் 29-ம் தேதி காலை 11 மணிக்கு கோட்ட அலுவலகத்தில் நடைபெறுகிறது. தபால் சேவைகள், சேமிப்பு வங்கி மற்றும் காப்பீடு தொடர்பான புகார்களை முழு விவரங்களுடன் தபால் கண்காணிப்பாளர் முகவரிக்கு வரும் 22-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று குறிப்பிட்டு அனுப்ப வேண்டும் என தபால் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Similar News

News January 13, 2026

தருமபுரி: பொங்கல் பரிசு வரலையா..?

image

தருமபுரி மாவட்ட மக்களே! பொங்கல் பரிசு வழங்குவதில் குறைபாடு ஏற்பட்டாலோ, ஸ்டாக் இல்லை என அலுவலர்கள் பதிலளித்தாலோ, தரமாக இல்லையென்றாலோ 1967 (அ) 1800-425-5901-ஐ அழைக்கலாம். மேலும், பரிசு வாங்க ரேஷன் கடை திறந்திருக்கா எனத் தெரிந்துகொள்ள PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும்.( SHARE IT)

News January 13, 2026

தருமபுரி: நடத்துனர் மீது கொலைவெறி தாக்குதல்!

image

நல்லகுட்லஅள்ளியை சேர்ந்த பஸ் கண்டக்டர் அகிலரசன் (30). இவர் நேற்று முன்தினம் பஸ்சில் பயணித்த வினோத்குமாரிடம் (35) டிக்கெட் எடுக்கும்படி கூறினார். அதற்கு வினோத்குமார் “என்னிடமே டிக்கெட் கேட்கிறாயா?” என தகராறில் ஈடுபட்டார். பின் வினோத் பஸ் நிற்கும் போது கீழே கிடந்த கட்டையால் அகிலரசனை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இதையடுத்து பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் வினோத்குமாரை கைது செய்தனர்.

News January 13, 2026

தருமபுரி: மாமனாரை கொன்ற மருமகன்!

image

தருமபுரி, எரங்காட்டு கொட்டாயை சேர்ந்தவர் ஆறுமுகம் (47) மருந்துக்கடை ஊழியராக உள்ளார். இவருக்கு ஜோதி என்கிற மனைவியும் 2 மகன்கள் & 2 மகள்கள் உள்ளனர். ஜன.7ம் தேதி மதிகோன்பாளைய ஏரியில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தருமபுரி போலீசார் விசாரணை நடத்தினர். அதில், ஜோதிக்கும் அவரது மருமகனான சீதாராமனும் திருமணம் மீறிய உறவில் இருந்தது தெரியவந்தது. இதனை ஆறுமுகம் கண்டித்ததால், ஆறுமுகத்தை கொலை செய்தது தெரியவந்தது.

error: Content is protected !!