News December 19, 2025
செங்கல்பட்டு: வேலை செய்த வீட்டில் பெண் கைவரிசை!

தாம்பரம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த சுகுமார் (71) என்பவரது வீட்டில், திருவள்ளூரைச் சேர்ந்த லட்சுமி (50) என்பவர் சமையல் வேலைக்குச் சேர்ந்தார். ஒரு மாதத்திலேயே அவர் திடீரென வேலைக்கு வராமல் தலைமறைவானார். சந்தேகமடைந்த சுகுமார் பீரோவைச் சோதித்தபோது, அதிலிருந்த நகை மற்றும் பணம் திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்து தாம்பரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News January 12, 2026
செங்கை: கைவரிசை காட்டப்போய் ‘பல்பு’ வாங்கிய கும்பல்

அச்சிறுபாக்கம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சமையல் கூடத்திற்குள் நேற்று இரவு புகுந்த மர்ம நபர்கள், ஜன்னல் கண்ணாடியை உடைத்து மின்சார அடுப்பு உள்ளிட்ட பொருட்களைத் திருட முயன்றனர். அமுயற்சி தோல்வியடைந்ததால், அங்கிருந்த டியூப் லைட்டை மட்டும் திருடிச் சென்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து அங்கு காவலாளியை வேலைக்கு எடுக்க பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
News January 12, 2026
மாமல்லபுரம்: ஒரு நொடியில் பறிபோன உயிர்!

கோவளம் – மாமல்லபுரம் இடையே நடைபெற்ற டிரையத்லான் போட்டிக்காக, பனையூர் பகுதியில் கொடிக்கம்பங்கள் நடும் பணியில் அச்சரப்பாக்கத்தைச் சேர்ந்த மெய்யப்பன் (29) ஈடுபட்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக இரும்பு கம்பம் மின்கம்பியில் உரசியதில் மின்சாரம் தாக்கி மெய்யப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த கானத்தூர் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
News January 12, 2026
செங்கை: பெண் தூக்கி வீசப்பட்டு துடிதுடித்து பலி!

ஊரப்பாக்கம் அருகே காரணைப்புதுச்சேரியைச் சேர்ந்த பூர்ணிமா (34), தனது கணவர் சரவணகுமாருடன் மோட்டார் சைக்கிளில் சினிமா பார்க்கச் சென்றார். அப்போது அவ்வழியாக வந்த லாரி மோதியதில், பின்னால் அமர்ந்திருந்த பூர்ணிமா தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, லாரி ஓட்டுநர் நிரஞ்சனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


