News December 19, 2025
விருதுநகரில் பள்ளி மாணவர் தற்கொலை

விருதுநகர் RS நகரை சேர்ந்தவர் தங்கப்பாண்டி. இவரின் மகன் விஸ்வ பாண்டி 15. இவர் 10th படித்து வருகிறார். இவர் சரியாக படிக்கவில்லை என தந்தை திட்டியதில் மன வருத்தமடைந்து நேற்று வீட்டின் கபோர்டு கம்பியில் தூக்கிட்டு தற்கொலை செய்தார். மேலும் சத்தம் வராமல் இருக்க வாயில் செல்லோ டேப் ஒட்டியும், இரு கால்களையும் கட்டிய நிலையில் இறந்து கிடந்தார். இவரின் உடலை மீட்ட விருதுநகர் கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News December 25, 2025
விருதுநகர்: வீடுகட்ட ரூ.1.20 லட்சம் நிதி உதவி

பிரதம மந்திரி கிராமிய வீடு கட்டும் திட்டத்தின் கீழ், வீடு கட்டுவதற்கு அரசாங்கம் ரூ.1.20 லட்சம் நிதி உதவி வழங்குகிறது. இதில் முழுத் தொகையும் நேரடியாக பயனாளியின் வங்கிக் கணக்கிற்கு மாற்றப்படுகிறது. நிரந்தர வீடு இல்லாதவர்கள், வீடற்றவராகவோ அல்லது பாழடைந்த வீட்டில் வசிப்பவர்கள், குறைந்த குடும்ப வருமானம் உள்ளவர்கள் Aawas Survey App ஐப் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். SHARE IT
News December 25, 2025
விருதுநகர்: வாட்ஸ்அப் வழியாக கேஸ் புக்கிங்!

விருதுநகர் மக்களே, கேஸ் சிலிண்டர் புக் செய்ய நீங்கள் நேரில் செல்ல தேவையில்லை. உங்கள் வாட்ஸ்அப் மூலமாக எளிதாக & விரைவான புக் செய்யலாம். இண்டேன் (Indane): 7588888824, பாரத் கேஸ் (Bharat Gas): 1800224344, ஹெச்பி கேஸ் (HP Gas): 9222201122. மேற்கண்ட எண்களுக்கு, வாட்ஸப்பில் ‘HI’ என மெசேஜ் செய்தால் போதும், உங்கள் வீடு தேடி கேஸ் சிலிண்டர் வந்தடையும். மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!
News December 25, 2025
விருதுநகர்: பஸ்ஸில் சடலமாக மீட்கப்பட்ட மெக்கானிக்

மதுரை கரிமேடு மேலபொன்னகரம் பகுதியை சேர்ந்தவர் அண்ணாதுரை மகன் சுப்புராஜ் (35). இவர் பாறைபட்டியில் ஒர்க்ஷப்பில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 22ம் தேதி ஒர்க்ஷாப்பில் விட்டு வெளியே சென்றவர் நேற்று பழுது பார்க்க நிறுத்தி வைக்கப்பட்ட மினி பஸ் சீட்டில் பிரேதமாக கிடந்துள்ளார். இது குறித்து தகவலறிந்த போலீசார் சுப்புராஜ் உடலை மீட்டு கொலையா என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


