News December 19, 2025

இருக்கிறோம் எனக்காட்டவே எதிர்ப்பு: செந்தில் பாலாஜி

image

பழைய கட்சி, புதிய கட்சி என யாராக இருந்தாலும் சரி திமுகவை தான் போட்டி என்று கூறுவதாக செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். <<18602926>>விஜய்யின் விமர்சனங்களுக்கு<<>> பதிலளித்த அவர், மக்கள் மனதில் நிலைத்திருக்கும் திமுகவோடு போட்டி என்று சொன்னால் தான், தங்கள் இருப்பை மக்களிடம் வெளிப்படுத்த முடியும் என்பதற்காக பேசி வருவதாக குறிப்பிட்டார். தேர்தல் முடிந்த பிறகு எல்லாவற்றுக்கும் பதில் கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.

Similar News

News January 2, 2026

அதிமுகவில் இருந்து விலகி விஜய் கட்சியில் இணைந்தார்

image

செங்கோட்டையனை தொடர்ந்து அதிமுக நிர்வாகிகள் பலர் தவெகவில் இணையவிருப்பதாக பேச்சு அடிபடுகிறது. அந்த வகையில், அதிமுக திருச்செங்கோடு Ex சேர்மன் பாலசுப்பிரமணியன், அருண்ராஜ் முன்னிலையில் தவெகவில் இணைந்துள்ளார். MGR காலத்திலேயே ஒன்றிய சேர்மனாக இருந்த அவர், திருச்செங்கோடு அதிமுகவின் முகமாக விளங்கினார். 2026 தேர்தலில் திருச்செங்கோடு தொகுதியில் அருண்ராஜ் போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

News January 2, 2026

யார் இந்த ஜே.சி.டி பிரபாகர்?

image

தவெகவில் இணைந்த <<18744071>>ஜேசிடி பிரபாகர் <<>>எம்.ஜி.ஆருக்கு நெருக்கமானவராக அறியப்பட்டவர். 1980, 2011 ஆண்டுகளில் வில்லிவாக்கம் தொகுதியில் வெற்றி பெற்று MLA-வாக பணியாற்றி இருந்தார். அதிமுக பிளவின்போது OPS அணியில் முக்கியப் பங்கு வகித்தவர். அதிமுகவை ஒன்றிணைக்கும் நோக்கில் அதிமுக ஒருங்கிணைப்புக் குழுவை உருவாக்கியதில் முக்கியமானவர் இவர். கட்சி ஒருங்கிணைப்பு முயற்சி பலனளிக்காததால் தவெகவில் இணைந்துள்ளார்.

News January 2, 2026

2025-ல் மட்டும் 167 புலிகள் உயிரிழப்பு

image

உலகிலேயே அதிக புலிகளைக் கொண்ட நாடான இந்தியாவில், 2025-ம் ஆண்டில் 31 குட்டிகள் உட்பட 167 புலிகள் உயிரிழந்துள்ளன. தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் (NTCA) தகவலின்படி, இது 2024-ல் பதிவான இறப்புகளை விட 41 அதிகம் ஆகும். எந்த மாநிலத்தில், எவ்வளவு புலிகள் உயிரிழந்துள்ளன என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.

error: Content is protected !!