News April 30, 2024

இயற்கை எரிவாயு மூலம் பஸ்களை இயக்க திட்டம்

image

சென்னை & விழுப்புரம் போக்குவரத்துக் கழகத்தில் இயற்கை எரிவாயு பஸ்களை தமிழக அரசு அறிமுகம் செய்யவுள்ளது. இது வெற்றிகரமாக இருக்கும் பட்சத்தில், அனைத்து போக்குவரத்துக் கழகத்திலும் பஸ்கள் இயற்கை எரிவாயு பயன்பாட்டிற்கு மாற்றப்படும் என்று கூறப்படுகிறது. டீசல் பயன்பாட்டில் இருந்து இயற்கை எரிவாயுவுக்கு மாற்றம் செய்வதால், காற்று மாசு & செலவினத்தைக் குறைக்க முடியும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Similar News

News November 15, 2025

இன்னும் சற்று நேரத்தில் ராகுல் காந்தி ஆலோசனை

image

பிஹார் தேர்தலில் 61 இடங்களில் போட்டியிட்ட காங்., 6 இடங்களில் மட்டுமே வென்றது. தேசிய கட்சியான காங்.,கிற்கு இது பெரும் பின்னடைவாக அமைந்தது. இந்நிலையில், தேர்தல் முடிவுகள் தொடர்பாக, கட்சியின் மூத்த தலைவர்களுடன், மதியம் 12:00 மணிக்கு ராகுல் காந்தி ஆலோசனை நடத்தவுள்ளார். தொடர் தோல்விகள் தொடர்பாகவும், கட்சியின் உள்கட்டமைப்புகளை வலுப்படுத்துவது தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொள்ளப்படவுள்ளது.

News November 15, 2025

கஞ்சா கேள்வி: ‘இட்லி, தோசை’ என நயினார் பதில்!

image

தமிழகத்தில் கிராமங்களிலும் கஞ்சா பயன்பாடு அதிகரித்து வருவதாக நயினார் நாகேந்திரன் பேட்டியளித்தார். அப்போது இடைமறித்த செய்தியாளர், ‘குஜராத்தில் அதிக கஞ்சா பிடிபட்டுள்ளதே?’ என கேட்க, சற்று பின்வாங்கிய நயினார், ‘முதலில் இட்லி, தோசை சாப்பிடுங்கள், அப்புறம் சப்பாத்தி சாப்பிடுங்கள்’ என்றார். அதாவது, முதலில் தமிழகத்தை கவனியுங்கள், பிறகு குஜராத்தை பற்றி பேசலாம் எனக்கூறி, சந்திப்பை முடித்து கொண்டார்.

News November 15, 2025

BREAKING: வங்கிக் கணக்கில் ₹1,000 வந்தது.. செக் பண்ணுங்க

image

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் 27-வது தவணை ₹1,000 சற்றுமுன் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது. மொத்தம் 1.15 கோடி பயனாளிகளுக்கு செலுத்தப்பட்டதாக அரசு கூறியுள்ளது. மேலும், ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் மூலம் விடுபட்ட நபர்களிடம் இருந்து உரிமைத் தொகைக்கு பெறப்பட்ட விண்ணப்பங்களை இறுதி செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அவர்களுக்கும் விரைவில் ₹1,000 வழங்கப்படும் எனவும் தெரிகிறது.

error: Content is protected !!