News April 30, 2024
சண்டிகேஸ்வரர் முன் சொடுக்கு போடலாமா?

சிவபெருமானுடன், பஞ்ச மூர்த்தியரில் ஒருவராக பவனி வருபவர் விசாரசர்மர் சண்டிகேஸ்வரர். ஈசனின் அடியார் கூட்டத் தலைவனான இவர், எப்போதுமே சிவ சிந்தனையில் ஆழ்ந்திருப்பார். இவரின் கவனத்தை தம் பக்கம் ஈர்க்க, பக்தர்கள் சந்நிதியில் கைகளைத் தட்டுவது, சொடுக்கு போடுவது, நூல் பிரித்துப் போடுவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இது பெரிய பாவச் செயலாகும். சைவ நெறிப்படி இவ்விதமான செயல்களில் ஈடுபடக் கூடாது.
Similar News
News August 27, 2025
அஸ்வினுக்கு நெகிழ்ச்சியுடன் பிரியா விடை அளித்த CSK

அஸ்வினை ‘கேரம் பால் திரிபுர சுந்தரன்’ என வர்ணித்து CSK நிர்வாகம் பிரியாவிடை அளித்துள்ளது. CSK-ன் பாரம்பரியத்தை தூணாக நிறுத்தி, சேப்பாக்கத்தை ஒரு கோட்டையாக கர்ஜிக்க வைத்ததாகவும், சூப்பர் கிங்காக தொடங்கிய அவரது பயணம், ஒரு சூப்பர் கிங்காகவே முடிந்ததாகவும் தெரிவித்துள்ளது. மேலும், என்றென்றும் அவர் சிங்கம் தான் எனவும், என்றென்றும் அவர் நம்மில் ஒருவர் தான் என்றும் கூறியுள்ளது.
News August 27, 2025
SPACE: நம்மால் Time Travel செய்ய முடியுமா?

Interstellar படத்தில் 5வது பரிமாணம் மூலம் டைம் டிராவல் செய்யும் காட்சிகளை காட்டியிருப்பார்கள். ஆனால் நாமும் அதை செய்ய முடியுமா என்றால் இல்லை. நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் 4வது பரிணாமத்தில் நேரம் என்பது நேர்கோட்டில் செல்லும் விஷயம். இதை யாராலும் நிறுத்தவோ மாற்றவோ முடியாது. அதனால் டைம் டிராவல் சாத்தியமில்லை என அறிவியல் சொல்கிறது. Time Travel பற்றி உங்கள் கருத்து என்ன? கமெண்ட்ல சொல்லுங்க..
News August 27, 2025
டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆக.30, 31 தேதிகளில் டாஸ்மாக் கடைகள், FL உரிமம் பெற்ற பார்கள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டம் – ஒழுங்கு பிரச்னையை தடுக்கும் வகையில், அந்தந்த மாவட்டங்களில் குறிப்பிட்ட கோயில் விஷேச நாள்களில் விடுமுறை விட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக குமரியில், சொத்தவிளை, சுசீந்திரம், தோவாளை, நாகர்கோவில் உள்ளிட்ட 11 இடங்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறையாகும்.