News December 19, 2025
நாகூர் ஹனிபா நூற்றாண்டு விழா அறிவிப்பு

இசைமுரசு நாகூர் ஹனிபாவின் நூற்றாண்டு விழா வரும் டிச.20-ம் தேதி (சனிக்கிழமை) காலை 10:30 மணிக்கு, தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் எம்.பி, எம்எல்ஏ, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர். எனவே இந்நிகழ்வில் நாகை மாவட்ட மக்கள் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு ஆட்சியர் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 25, 2025
நாகை: 44 பேர் எரித்து கொல்லப்பட்ட தினம் இன்று!

நாகை மாவட்டம் கீழ்வெண்மணியில் விவசாயக்கூலியை உயர்த்தி கேட்டு போராடியதற்காக 19 குழந்தைகள், 20 பெண்கள், 6 ஆண்கள் என 44 பட்டியலின தொழிலார்களை உயிருடன் எரித்து கொல்லப்பட்ட தினம் இன்று. மனிதாபிமானமற்ற இந்த துயர சம்பவத்தின் 57ஆம் ஆண்டு நினைவு கூறும் விதமாக நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. மேலும் இச்சம்பவத்தின் நினைவாக 2014-யில் கீழ்வெண்மணியில் நினைவுத் தூண் ஒன்று நிறுவப்பட்டது.
News December 25, 2025
நாகை: 12th போதும்.. அரசு வேலை ரெடி!

தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரத்துறையில் உள்ள கள உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: தமிழ்நாடு அரசு வேலை
2. பணியிடங்கள்: 41
3. வயது: 18 – 48
4. சம்பளம்: ரூ18,200 – ரூ.67,100
5. கல்வித்தகுதி: 12th & MLT (Medical Laboratory Technology)
6. கடைசி தேதி: 29.12.2025
7. விண்ணப்பிக்க: <
இந்த தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!
News December 25, 2025
நாகை: CPM செயலாளர் சண்முகம் நினைவஞ்சலி

நாகை மாவட்டம் கீழ்ண்மணியில், 57-ம் ஆண்டு தியாகிகள் நினைவு தினத்தை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள தியாகிகள் நினைவு சின்னத்தில், CPM மாநில செயலாளர் சண்முகம், மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரை தொடர்ந்து அரசியல் தலைமை குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன், வாசுகி, ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினார்.


