News December 19, 2025
குமரியில் பைக்குகள் திருடிய கேரள வாலிபர் கைது

கடந்த மாதம் திருவட்டார் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பூந்தோப்பு, வேர்கிளம்பியில் 3 பைக்குகள் திருட்டு போனது. இந்நிலையில் களியக்காவிளையில் போலீசார் ரோந்து சென்றபோது கேரள மாநிலம் திருவனந்தபுரம் வள்ளக்கடவு பகுதியை சேர்ந்த சஜித்கான்(25) என்பவரை பிடித்து விசாரித்தபோது அவர் திருவட்டார் பகுதியில் 3 பைக் திருடியதை ஒப்புக்கொண்டார். அவரிடமிருந்து 3 பைக்குகளை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.
Similar News
News December 27, 2025
குமரி: ரேஷன் கார்ட் இருக்கா… கலெக்டர் முக்கிய அறிவிப்பு…

மத்திய அரசின் உத்தரவின்படி, அனைத்து AAY, PHH வகை ரேஷன் அட்டைதாரர்களும் வரும் டிச.31-ம் தேதிக்குள் தங்களது கைவிரல் ரேகையை பதிவு (e-KYC) செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்தந்த பகுதி மக்கள் அருகிலுள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று இப்பணிகளை உடனடியாக முடிக்க வேண்டும் என கலெக்டர் அறிவித்துள்ளார். ரேஷனர் கார்ட் வைத்திருக்கும் அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்க
News December 27, 2025
குமரி: ஆற்றில் குதித்த புதுமாப்பிள்ளை சடலமாக மீட்பு!

முதுகுமெல் பகுதியை சேர்ந்த இவாஞ்ஜெறி (28) சட்டம் படித்துள்ளார். இவருக்கு திருமணமாகி 2 மாதம் ஆகிறது. இந்நிலையில் இவாஞ்ஜெறி டிச.24ம் தேதி குழித்துறையில் உள்ள ஒரு தனியார் மதுபான விடுதியில் மது அருந்தி கொண்டிருந்த நிலையில் போதை தலைக்கு ஏறியதால் தாமிரபரணி ஆற்றில் குதித்தார். 2 நாட்களாக தீயணைப்புத் துறையினர் தேடி வந்த நிலையில் நேற்று கமுகனூர் ஆற்றில் சடலமாக மீட்டனர். இதுகுறித்து போலீசார் விசாரணை.
News December 27, 2025
குமரி: கூட்டுறவு வங்கியில் ரூ.96,210 சம்பளத்தில் வேலை..!

குமரி மக்களே, தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள 50 உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. 18 – 32 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி, B.E/B.Tech முடித்தவர்கள் டிச.31க்குள் தகுதியுடைய நபர்கள் இங்கு <


