News December 18, 2025

நாற்றங்கால் பணியை ஆய்வு செய்த ஆட்சியர்

image

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றியம் மேலகொந்தை ஊராட்சியில் ஊரக வளர்ச்சித்துறை மற்றும் வனத்துறை இணைந்து மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலம் புதிய நாற்றங்கால் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வரும் பணியினை ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் இன்று (டிச.18) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் உதவி செயற்பொறியாளர் நித்யா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Similar News

News December 24, 2025

விழுப்புரம்: கேன் வாட்டர் குடிப்போர் கவனத்திற்கு

image

விழுப்புரம் மாவட்டத்தில் கேன் தண்ணீர் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன. கேன் தண்ணீர் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை. குடிநீர் கேன்களில், பிளாஸ்டிக் தரம், கேன்களின் சுத்தம், உற்பத்தி மற்றும் காலாவதி தேதி, BIS மற்றும் FSSAI முத்திரைகள் ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும். ஒரு கேனை 30 முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கேன்களின் நிறம் மாறினால் பயன்படுத்த கூடாது. (SHARE பண்ணுங்க)

News December 24, 2025

விழுப்புரத்தில் இருந்து 200 வாக்கு பதிவு இயந்திரம் அனுப்பி வைப்பு

image

சென்னை தலைமை தேர்தல் ஆணையரின் உத்தரவின்படி விழுப்புரம் மாவட்டத்தில் கூடுதலாக உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் 200 எண்ணிக்கை கொண்ட கட்டுபாட்டு கருவிகளை அரியலூர் மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்துள்ளனர். இதை தொடர்ந்து, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர சேமிப்பு கிடங்கிலிருந்து 200 எண்ணிக்கை கொண்ட கட்டுபாட்டு கருவிகளை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அனுப்பி வைத்தார்.

News December 24, 2025

விழுப்புரம்: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!