News December 18, 2025

வேலூர் மாவட்டத்தில் 4,726 பேர் எஸ்ஐ தேர்வு எழுத உள்ளனர்

image

சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு விண்ணப்பித்த, பொதுப்பிரிவினர் மற்றும் துறை சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கு, முதன்மை தேர்வு, தமிழ் தகுதித்தேர்வு வரும் டிச.21-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள விஐடி பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையத்தில் 996 பெண்களும், 3,730 ஆண்களும் என மொத்தம் 4,726 தேர்வு எழுத உள்ளனர் என மாவட்ட காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News December 28, 2025

வேலூர்: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா பெறுவது எப்படி?

image

ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவச பட்டா பெறலாம். இந்த தகுதிகள் இருந்தால் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்பு திட்டம் தெரிந்தவர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க!

News December 28, 2025

வேலூர்: ஒரே நாளில் குவிந்த 6186 மனுக்கள்!

image

இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம் நேற்று நடந்தது. இதில் வேலூர் மாவட்டம் முழுவதும் வாக்குச்சாவடி மையங்களில் நடந்த சிறப்பு முகாம்களில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், முகவரி மாற்றம் தொடர்பாக 6,186 பேர் விண்ணப்பித்தனர். இந்த முகாம் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

News December 28, 2025

வேலூர்: ஆன்லைனில் ரூ.6.5 லட்சத்தை இழந்த வாலிபர்!

image

வேலூர்: சத்துவாச்சாரியைச் சேர்ந்த 22 வயது வாலிபர், தனக்கு வந்த குறுந்தகவலை நம்பி, ஆன்லைன் வர்த்தகத்தில் ரூ.6,50,000 பணத்தை முதலீடு செய்துள்ளார். பின்னர் அவர் அந்த பணத்தை எடுக்க முயன்றார். ஆனால் அதை எடுக்க முடியவில்லை. அப்போது தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த வாலிபர், வேலூர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!