News December 18, 2025

திருப்பரங்குன்றத்தில் அடுத்த சர்ச்சை: புதிய புகார் மனு

image

திருப்பரங்குன்றத்தில் இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் சோலை கண்ணன் தலைமையில் நிர்வாகிகள் காவல் நிலையத்தில், சந்தனக்கூடு மற்றும் கல்லத்தி மரம் தொடர்பாக புகார் மனு ஒன்றை இன்று அளித்தனர். அதில் இன்னும் 2 நாளில் மலை மீது உள்ள தர்கா சார்பாக சந்தனக்கூடு நடைபெற உள்ளது. தீபத்தூண் வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் மலை மீது செல்லவோ எந்த நிகழ்வும் நடத்தவோ அனுமதிக்க கூடாது என புகார் அளிக்கப்பட்டது.

Similar News

News December 20, 2025

மதுரை: ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு!

image

மதுரை மக்களே ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால் ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க.

News December 20, 2025

மதுரை: ரூ.60 லட்சம் மோசடி: கூலாக போஸ் கொடுத்த கும்பல்..!

image

மதுரையை சேர்ந்த தம்பதியினரை டிஜிட்டல் அரஸ்ட் செய்ததாகக் கூறி, அவர்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து 60 லட்சத்து 72 ஆயிரம் ரூபாயை மோசடி செய்த நீலகிரி மாவட்டம் கூடலுார் மரப்பாலம் சுதீஷ் என்ற உமர்பாரூக் (28), பந்தலுார் முகமது ரியாஷ் (29), கேரளா மலப்புரம் பாபு (49), அப்துல் கபூர் (43), முகமது சையது (34), முகமது சமீம் (34) என மொத்த கும்பலை மதுரை மாவட்ட போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 20, 2025

மதுரை: சேலையில் தீ வைத்து மூதாட்டி தற்கொலை

image

மதுரை பீ.பீ .குளத்தை சேர்ந்­த­வர் முனியம்­மாள்(58). சற்று மன­ நிலை பாதிக்­கப்­பட்­டிருந்த அவர் இன்று வீட்­டின் பாத்ரூமிற்­குள் சென்­று சேலை­யில் தீ வைத்து கொண்­டார். கருகிய நிலை­யில் மதுரை அரசு மருத்துவம­னைக்கு கொண்டு செல்லும் வழியி­லேயே அவர் உயி­ரிழந்­தார். இது குறித்து தல்­லா­கு­ளம் போலீ­சார் வழக்குப் பதிவு செய்து விசா­ரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!