News December 18, 2025
பெரியகுளத்தில் திருக்குறள் போட்டி

பெரியகுளம் தமிழ் இலக்கிய மன்றம் சார்பில் ஆண்டுதோறும் திருக்குறள் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. ஜன.2,3,4 ஆகிய நாட்களில் கட்டுரை, கவிதை, பேச்சுப்போட்டி, குறள் ஒப்பித்தல் போட்டிகள் தென்கரை தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. விருப்பமுள்ளவர்கள் புலவர், மு.ராஜரத்தினம், தமிழ் இலக்கிய மன்றம் அமைப்பாளர், சர்வோதய சங்கம், தென்கரை, பெரியகுளம் என்ற முகவரியில் டிச.31.க்குள் பதிவு செய்ய வேண்டும்.
Similar News
News December 25, 2025
தேனியில் பைக், கார் வைத்திருப்போர் கவனத்திற்கு!

தேனி மக்களே, ஓட்டுநர் உரிமம் பெற இனி ஆர்டிஓ ஆபீஸுக்கு அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை இந்த <
News December 25, 2025
தேனியில் புகையிலை விற்ற பெண் கைது

கோம்பை காவல் நிலைய போலீசார் குற்றச் தடுப்பு சம்பந்தமாக நேற்று (டிச.24) ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அப்பகுதியை சேர்ந்த தேன்மொழி என்பவர் அவரது பெட்டிக்கடையில் சட்ட விரோதமாக புகையிலை பாக்கெட்டுகளை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. கடையில் இருந்த புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் தேன்மொழி மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
News December 25, 2025
கௌமாரியம்மன் கோயிலில் ரூ.8.71 லட்சம் உண்டியல் காணிக்கை

வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் வளாகத்தில் 12 நிரந்த உண்டியல்கள், ஒரு திருப்பணி உண்டியல், கண்ணீஸ்வர முடையார் கோயிலில் இரு உண்டியல்கள் என மொத்தம் 15 உண்டியல்கள் உள்ளன. இவற்றில் பக்தர்கள் செலுத்திய காணிக்கைகள் எண்ணும் பணி நடைபெற்றது. உண்டியலில் காணிக்கையாக ரூ.8.71 லட்சம், தங்கம் 26 கிராம், வெள்ளி 15 கிராம் இருந்தன. கடந்த செப்டம்பரில் உண்டியல் எண்ணும் பணி நடந்தது குறிப்பிடத்தக்கது.


