News December 18, 2025
திருச்சி மக்களுக்கு மின்வாரியம் சார்பில் அறிவிப்பு

விவசாயிகள் நடப்பு ஆண்டுக்கான தட்கல் முறையில் மின் இணைப்பு பெற விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் அறிவித்துள்ளது. அதன்படி திருச்சி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் தட்கல் முறையில் மின் இணைப்பு பெற அருகில் உள்ள உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு உரிய கட்டணத்தை செலுத்தி விண்ணப்பிக்கலாம் என திருச்சி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் செந்தாமரை தெரிவித்துள்ளார்.
Similar News
News December 27, 2025
திருச்சி: து.குடியரசு துணைத் தலைவர் வருகை – ஆட்சியர் தடை

இந்திய குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வரும் டிச.29 ஆம் தேதி திருச்சி விமான நிலையம் வருகை தர உள்ளார். இதனை முன்னிட்டு பாதுகாப்பு காரணங்கள் காரணமாக அன்றைய தினம் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது. தடையை மீறி ட்ரோன்கள் பறக்க விடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News December 27, 2025
திருச்சி: அதிமுக பெண் நிர்வாகி தற்கொலை

திருச்சி மாவட்டம், நவல்பட்டு பர்மா காலனியைச் சேர்ந்தவர் ஜெயந்தி. அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு அணியின் துணைச் செயலாளரான இவர், கணவனைப் பிரிந்து மகளுடன் தனியே வசித்து வந்துள்ளார். இந்நிலையில், தனது மகளுடன் எழுந்த பிரச்சனையின் காரணமாக மனமுடைந்த ஜெயந்தி, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் அவரது உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 26, 2025
திருச்சி: எமதர்மனுக்கு உயிர் கொடுத்த ஞீலிவனேசுவரர்!

மண்ணச்சநல்லூர் அருகே திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேசுவரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் எமனுக்கு என்று தனி சன்னதி உள்ளது. திருக்கடையூரில் தாம் காலால் உதைத்தமையால் இறந்த எமதர்மராஜனுக்கு இறைவன் மீண்டும் உயிர் கொடுத்து, அதிகாரத்தைத் திரும்பளித்த கோயில் இது என்று கூறப்படுகிறது. மேலும் இக்கோயிலில் சனீஸ்வரனுக்கு அதிபதியான எமன் சந்நிதி இருப்பதால் நவகிரகங்கள் கிடையாது. தெரியாதவர்களுக்கு SHARE பண்ணுங்க.


