News April 30, 2024

கள்ளச்சந்தையில் IPL டிக்கெட் விற்ற 8 பேர் கைது

image

கள்ளச்சந்தையில் ஐபிஎல் டிக்கெட் விற்ற 8 பெற போலீசார் கைது செய்துள்ளனர். CSK-SRH இடையேயான போட்டி சேப்பாக்கத்தில் நடைபெற்றது. இந்த போட்டியைக் காண வந்த ரசிகர்களிடம், சிலா் அதிக விலைக்கு டிக்கெட் விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் சரவணன், நவீன் குமார் உள்ளிட்ட 8 பேரை கைது செய்து ரூ.72,242 மதிப்புள்ள 26 டிக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

Similar News

News August 28, 2025

No Helmet No Petrol… எங்கு தெரியுமா?

image

‘தலைக்கவசம் உயிர்கவசம்’ என்பதை வலியுறுத்தும் வகையில் உ.பி.யில் புதிய முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் செப்டம்பர் 1 முதல் 30-ம் தேதி வரை ‘ஹெல்மெட் இல்லையெனில் எரிபொருள் இல்லை’ என்ற பிரச்சாரத்தை அம்மாநில அரசு முன்னெடுத்துள்ளது. இது தண்டனை அல்ல, மாறாக வாகன ஓட்டிகளை சட்டத்தை கடைபிடிக்க எடுக்கப்பட்ட முயற்சி என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நம் ஊருக்கும் இது வேணுமா?

News August 28, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: பெரியாரைத் துணைக்கோடல் ▶குறள் எண்: 441 ▶குறள்: அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொளல். ▶ பொருள்: அறமுணர்ந்த மூதறிஞர்களின் நட்பைப் பெறும் வகை அறிந்து, அதனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.

News August 28, 2025

இந்திய கால்பந்து கூட்டமைப்புக்குத் தடை? ஃபிஃபா எச்சரிக்கை

image

அக்டோபர் 30-ம் தேதிக்குள் புதிய விதிகளை அமல்படுத்தவில்லை என்றால் இந்திய கால்பந்து கூட்டமைப்புக்கு(AIFF) தடை விதிக்கப்படும் என ஃபிஃபா எச்சரித்துள்ளது. கால்பந்து அமைப்புகள் தன்னிச்சையாக இயங்க வேண்டுமென ஃபிஃபா நினைக்க, இந்திய அரசு அதில் தலையிட நினைப்பதே பிரச்னைக்கு காரணம். ஒலிம்பிக் போட்டிகள் வரும் 2036-ல் அகமதாபாத்தில் நடைபெற இருக்கும் நிலையில், AIFF-க்கு தடை விதிக்கப்பட்டால் அது பாதிப்பாக அமையும்.

error: Content is protected !!