News April 30, 2024

ஏப்ரல் 30: வரலாற்றில் இன்று

image

1803 – ஐக்கிய அமெரிக்கா லூசியானா மாநிலத்தை பிரான்சிடம் இருந்து 15 மில்லியன் டாலருக்கு வாங்கியது.
1900 – ‘ஹவாய்’ ஐக்கிய அமெரிக்காவின் ஒரு பகுதியாக அறிவிக்கப்பட்டது.
1945 – ஹிட்லர் தனது மனைவியுடன் தற்கொலை செய்து கொண்டார்.
1955 – இந்திய இம்பீரியல் வங்கியின் பெயர் ‘பாரத ஸ்டேட் வங்கி’ என மாற்றப்பட்டது.
1982 – திருச்சியில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.

Similar News

News November 15, 2025

மதுரை: டிராக்டர் மோதி டூவீலரில் சென்றவர் பலி.!

image

திருமங்கலத்தைச் சேர்ந்த தவமணி (59), என்பவர் டூவீலரில் மங்கல்ரேவு அத்திப்பட்டி சாலையில் டூவீலரில் சென்று கொண்டிருந்தார். ஜம்பலாபுரம் அருகே பேரையூரைச் சேர்ந்த இளையராஜா (34) என்பவர் ஓட்டி வந்த டிராக்டர் இவர் மீது மோதியது. படுகாயத்துடன் மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தவமணி இன்று உயிரிழந்தார். டிராக்டர் டிரைவரை கைது செய்து பேரையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

News November 15, 2025

100 நாள் வேலை திட்டத்தில் இனி 4 மணி நேரம் வேலை

image

₹2,000 உதவித்தொகையை ₹6,000 ஆக உயர்த்த கோரி தமிழகம் முழுவதும் கடந்த 11-ம் தேதி மாற்றுத்திறனாளிகள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து தலைமைச் செயலாளர் முருகானந்தம் அவர்களை அழைத்து பேசினார். இது தொடர்பாக மாற்றுத்திறனாளிகள் சங்கம் கூறும்போது, உதவித்தொகை ₹1,000 உயர்த்தப்படும்; மேலும், 100 நாள் வேலை திட்டத்தில் இனி 4 மணி நேரம் வேலை செய்தால் போதும் என தலைமை செயலாளர் உறுதியளித்ததாக தெரிவித்தனர்.

News November 15, 2025

மணிரத்னம் ஹீரோயினாக ஆசை: கயாடு லோஹர்

image

‘டிராகன்’ படம் மூலம் ரசிகர்களின் இதயங்களை கொள்ளை கொண்ட கயாடு லோஹர், நல்ல கதையம்சம் இருந்தால் எந்த ஹீரோவுடனும் நடிக்க தயார் என்று கூறியுள்ளார். அதேநேரம், மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க ஆசைப்படுவதாகவும் கூறியுள்ளார். மேலும், கவுரி கிஷன் மீதான உருவகேலிக்கு பதிலளித்த அவர், எல்லா துறைகளிலும் விமர்சனங்கள் வரும், அதிலிருந்து தப்பவே முடியாது என்றும் கூறியுள்ளார். இவர் ‘STR 49’ படத்தில் நடித்து வருகிறார்.

error: Content is protected !!