News December 18, 2025
FLASH: கிருஷ்ணகிரி: நாட்டு வெடிகுண்டு வீசிய மூவர் கைது!

கிருஷ்ணகிரி மாவட்டம் பாலேகுறியில் TATA நிறுவனத்தின் பேருந்து மீது பெட்ரோல் குண்டு வீசிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். கடந்த மாதம் TATA நிறுவன பேருந்து மோதி 2 இளைஞர்கள் பலியான நிலையில் நண்பர்கள் நாட்டு வெடிகுண்டு வீசியது தெரியவந்தது. பேருந்து மீது நாட்டு வெடிகுண்டு வீசிய சக்திவேல் (28), தனுஷ் (25), சேகர் (21) ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News December 25, 2025
கிருஷ்ணகிரி: புதிய வாகனம் வாங்க ரூ.50,000 மானியம்!

இந்திய அரசு கடந்த ஆன்டு செப்., மாதம் பிரதம மந்திரி இ-டிரைவ் (PM E-DRIVE) என்ற புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், பொதுமக்கள் எலக்ட்ரிக் வாகனங்களை எளிதாக வாங்க முடியும். இருசக்கர வாகனங்களுக்கு ரூ.10,000 வரையும், 3சக்கர வாகனங்களுக்குரூ.25,000-ரூ.50,000 வரையும் மானியம் வழங்கப்படுகிறது. புதிய வாகனம் வாங்க ஆசைப்படுபவர்கள் இந்த <
News December 25, 2025
கிருஷ்ணகிரி: வாடகை வீட்டில் வசிப்போர் கவனத்திற்கு!

கிருஷ்ணகிரியில் வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். ஷேர் பண்ணுங்க
News December 25, 2025
கிருஷ்ணகிரி ஆட்சியரின் கிறிஸ்துமஸ் வாழ்த்து!

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, இன்று (டிசம்பர்.25) மக்களுக்குத் தனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். மக்களிடையே அன்பும், அமைதியும், சகோதரத்துவமும் பெருக வேண்டும் என அவர் வாழ்த்தியுள்ளார். மேலும், ஏசு கிறிஸ்துவின் போதனைகளைப் பின்பற்றி அனைவரும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.


