News December 18, 2025

ரூ.30,000 பரிசு: திருப்பூர் மக்களே ஜாக்கிரதை

image

திருப்பூர் மாவட்ட போலீசார் சமூக வலைதளங்களில் பதிவு ஒன்றை பதிவு செய்தனர். அதில், 2025 ஆண்டு விரைவில் முடிவடைய உள்ளதால் ஒவ்வொரு குடிமகனுக்கும் ரூ.30,000 வழங்கப்படும் என்றும் அதற்கு லின்ங்-கை கிளிக் செய்ய வேண்டும் என பரப்பப்படுகிறது. திருப்பூரில் மக்களே அதை பயன்படுத்த வேண்டாம். அது தங்களது தனிப்பட்ட விவரங்களை திருடும் மர்ம நபர்கள் அனுப்பும் மோசடி தகவல் ஆகும் என தெரிவித்துள்ளனர்.

Similar News

News December 27, 2025

திருப்பூர்: ரூ.5 லட்சம் காப்பீடு விண்ணப்பிப்பது எப்படி?

image

திருப்பூர்: முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இத்திட்டத்தைப் பெற, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு 1800 425 3993 அழைக்கவும்.

News December 27, 2025

திருப்பூர்: ஆடு, கோழி பண்ணை அமைக்க ரூ.20 லட்சம் மானியம்!

image

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் nlm.udyamimitra.in என்ற இணையதளம் வாயிலாக தகுதிகளை கண்டறிந்து விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.

News December 27, 2025

தாராபுரம் அருகே விபத்து

image

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அலங்கியம் சாலை சிக்னல் அருகே சாலையில் வந்து கொண்டிருந்த லாரி எதிர்பாராதமாக கட்டுப்பாட்ட இறந்து சாலையில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக லாரியில் இருந்தவர்கள் உயிர் தப்பினர். இந்த விபத்து குறித்து தாராபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!