News December 18, 2025

தென்காசியில் டிச.26 விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

image

தென்காசி மாவட்டத்தில் 2025ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 26.12. 2025 வெள்ளிக்கிழமை காலை 11:00 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தலைமையில் நடைபெற உள்ளது. விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் தென்காசி மாவட்டத்தை சார்ந்த அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்கின்றனர்.

Similar News

News December 28, 2025

தென்காசி: தேர்வு இல்லை., SBI வங்கியில் ரூ.51,000 சம்பளம்!

image

தென்காசி மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. கடைசி தேதி டிச.23 அன்று முடிவடைய இருந்த நிலையில் விண்ணப்ப தேதி ஜன 5 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது., 20 – 35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் <>இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கவும். சம்பளம் ரூ.51,000 வழங்கப்படும். இதற்கு தேர்வு கிடையாது. இந்த பயனுள்ள தகவலை SHARE செய்யுங்க.

News December 28, 2025

தென்காசி: வாக்காளர் படிவங்களை சமர்ப்பிக்க அழைப்பு

image

வாக்காளர் பட்டியலில் இடம்பெற விண்ணப்பங்களை https://www..eci.gov.in/electors மற்றும் https://voters.eci.gov.in/ Voter Helpline App ECI NET App சமர்ப்பிக்கலாம். பெறப்படும் விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட வாக்குப்பதிவு அலுவலர்கள் மூலமாக விசாரணை மேற்கொண்டு வரும் 17.02.2026 அன்று வெளியிடப்படவுள்ள வாக்காளர் இறுதிப் பட்டியலில் இடம்பெற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தகவல்.

News December 28, 2025

தென்காசி காவல் அலுவலகத்தில் வருடாந்திர ஆய்வு

image

தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் இயங்கி வரும் தனிப்பிரிவு அலுவலகம், முகாம் அலுவலகம், மாவட்ட குற்ற ஆவன காப்பாகம், மாவட்ட குற்றப்பிரிவு , SJ&HR, ACTU ஆகியவற்றில் பராமரிக்கப்பட்டு வரும் கோப்புகள் மற்றும் பதிவேடுகளை திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணி (பொறுப்பு திருநெல்வேலி சரகம்) வருடாந்திர ஆய்வினை மேற்கொண்டு காவல்துறையினருக்கு அறிவுரைகளை வழங்கினார்.

error: Content is protected !!