News December 18, 2025
சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு 7 ஆண்டு சிறை

காயல்பட்டினத்தை சேர்ந்தவர் கெவின். இவர் கடந்த ஆண்டு தூத்துக்குடி பகுதியை சேர்ந்த இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் இவரை போக்சோ சட்டத்தில் கைது செய்த நிலையில் தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி கெவினுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
Similar News
News December 27, 2025
தூத்துக்குடி: பீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்
தூத்துக்குடி மாவட்ட இலவச சட்ட உதவி மையம்: 0461-2335111
தமிழ்நாடு அவசர உதவி: 0462-2572689
Toll Free 1800 4252 441
சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News December 27, 2025
தூத்துக்குடியில் மாநகராட்சி பகுதிகள் மின்தடை அறிவிப்பு

27.12.2025 தூத்துக்குடி டூவிபுரம் பிரிவு அலுவலகத்திற்குட்பட்ட விவிடி சிக்னல்,ராஜாஜி பார்க் வரை மாநகராட்சியால் மரக்கிளைகள் அகற்றும் பணி காலை 09.30 மணி முதல் 12.00 மணிக்குள் நடைபெறுவதால் பாளை ரோடு,டூவிபுரம் மெயின் ரோடு,டுவிபுரம் 2வது தெரு,சிதம்பர நகர் மாநகராட்சி வணிக வளாகம்,சுப்பையா முதலியார்புரம் ஆகிய பகுதிகளில் மின்l விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என்பதை தெரிவித்துள்ளனர்.
News December 27, 2025
தூத்துக்குடி: கடைக்குள் அரிவாளுடன் புகுந்து மிரட்டல்

சாத்தான்குளம் உள்ள பேய்குளம் பஜாரில் நெல்லையை சேர்ந்த ஆறுமுக நயினார் என்பவர் சொகுசு காரில் வந்த இவர் கையில் அரிவாளுடன் பஜாரில் வருவோர் போவோர்களிடம் மிரட்டியவாறு கூறப்படுகிறது. மேலும் அப்பகுதியில் உள்ள பூக்கடைக்கு சென்று பூக்கடையில் உள்ளவர்களையும் மிரட்டியதுடன் பூக்கடை உரிமையாளரை வெட்டி விடுவேன் என கூறியுள்ளார். பஜாரில் பாதுகாப்பு பணியில் இருந்த சாத்தான்குளம் போலீசார் அவரை கைது செய்தனர்.


