News December 17, 2025

சென்னை: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

சென்னை மாவட்டத்தில் இன்று (டிச.17) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

Similar News

News December 26, 2025

சென்னை: தோஷம் என்ற பெயரில் தங்க நகை திருட்டு

image

சென்னை சவுகார்பேட்டை மிண்ட் தெருவைச் சேர்ந்த தீபக் ஜெயின் (29) மீது நேற்று அடையாளம் தெரியாத இருவர், தோஷம் இருப்பதாக கூறி வசியப்படுத்தி தங்க வளையல்களை திருடிச் சென்றனர். மந்திரம் சொல்லுவது போல் கையை பிடித்து, பேப்பரில் சுற்றி பையில் வைக்கச் சொல்லியபோது, 10 சவரன் வளையல்கள் பறிக்கப்பட்டன. மயக்கம் தெளிந்தபின் திருட்டு தெரியவந்தது. புகாரின் பேரில் கொத்தவால்சாவடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News December 26, 2025

சென்னையில் இடியாப்பம் விற்க உரிமம் கட்டாயம்!

image

சென்னையில் இடியாப்பம் விற்பனை செய்ய உரிமம் கட்டாயம் என உணவு பாதுகாப்புதுறை தெரிவித்துள்ளது. சைக்கிள் மற்றும் இருசக்கர வாகனத்தில் பல்வேறு சிறுகுறு தொழில் விற்பனையாளர்கள் சுயதொழிலாக செய்து வரும் நிலையில் அவர்கள் ஆன்லைனில் இலவசமாக உரிமத்தை பெறலாம். ஆண்டுக்கு ஒருமுறை அவை புதுபிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தரமற்ற இடியாப்பம் விற்பனை செய்வதாக வந்த தகவலை தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

News December 26, 2025

சென்னை: College-ல் சீட் வாங்கி தருவதாக லட்ச கணக்கில் மோசடி

image

அசோக் நகரைச் சேர்ந்த ஆண்டனி அமிர்த ராஜ் (51) என்பவருக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு சின்னத்துரை என்பவர் அறிமுகமாகியுள்ளார். அவர் மூலம் ஆற்காட்டைச் சேர்ந்த லட்சுமி பிரியா (45) என்பவர் அறிமுகமானார். இவர்கள் கல்நடை மருத்துவக்கல்லூரியில் சீட்டு வாங்கி தருவதாக ரூ.42லட்சம் பெற்று மோசடி செய்துள்ளனர். அவர் அளித்த புகாரின் பேரில் கே.கே நகர் போலீசார் லட்சுமி பிரியாவை நேற்று கைது செய்தனர்.

error: Content is protected !!