News December 17, 2025
திருப்பூர் மாநகரில் இரவு ரோந்து பணி விவரம்

திருப்பூர் மாநகரில் இன்று (17.12.2024) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
Similar News
News December 26, 2025
திருப்பூர் அருகே விபத்து: பெண் உயிரிழப்பு!

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த சிவக்குமார், வீரலட்சுமி என்பவருடன் இருசக்கர வாகனத்தில், சேலம் கோவை தேசிய நெடுஞ்சாலையில், செங்கப்பள்ளி அடுத்த பள்ள கவுண்டம்பாளையம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த வாகனம் இவர்களது இருசக்கர வாகனம் மீது மோதியுள்ளது. இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் படுகாயமடைந்தனர். இதில் மருத்துவனையில் சிகிச்சைபெற்று வந்த வீரலட்சுமி, சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.
News December 26, 2025
திருப்பூர்: இழந்த பணத்தை திரும்ப பெற வேண்டுமா?

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!
News December 26, 2025
காங்கேயம் அருகே சோகம்: தம்பதி தற்கொலை!

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே உள்ளது நத்தக்காடையூர். இங்குள்ள வெள்ளியம்பாளையம் பகுதியில் நேற்று இரவு சுமார் 80 வயது மதிக்கத்தக்க வயதான கணவன் மற்றும் மனைவி ஆகியோர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற காங்கேயம் போலீசார், இருவரின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


