News December 17, 2025

காவலர்களை தள்ளியதாக விசாரணை கைதி மீது வழக்கு

image

நாகர்கோவில் சிறைச்சாலையில் உக்கிரபாண்டி என்பவர் விசாரணை கைதியாக இருந்து வருகிறார் .நேற்று இவர் சிறைக் காவலர்கள் 3 பேரை தள்ளி மிரட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்து பாளையங்கோட்டை கண்காணிப்பாளர் நேரில் வந்து விசாரணை நடத்தினார். இந்நிலையில் உக்கிரபாண்டி மீது சிறை அதிகாரி நேசமணி நகர் போலீசில் புகார் அளித்தார். அதன் பெயரில் நேசமணி நகர் போலீசார் இன்று வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News

News December 19, 2025

குமரி மாவட்டத்தில் தொகுதி வாரியாக நீக்கப்பட்டவர்கள் விபரம்

image

குமரியில் ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் தொகுதி வாரியாக நீக்கப்பட்டவர்கள் விபரம் வெளியிடப்பட்டுள்ளது. அதில்,
கன்னியாகுமரி – 28181,
நாகர்கோவில் – 27856,
குளச்சல் -25366
பத்மநாபபுரம் -21684
விளவங்கோடு -28396
கிள்ளியூர் -21890.
இவர்களில் இறந்த வாக்காளர்கள் – 56950. இரட்டை பதிவு கொண்டவர்கள் 11849, குடி பெயர்ந்தவர்கள் 75849, கண்டறிய இயலாத மற்றும் குடியிருப்பு பகுதியில் வசிக்காதவர்கள் 8474.

News December 19, 2025

குமரி: மகளிர் உரிமை தொகை வரலையா.? அரசு அறிவிப்பு

image

குமரி மக்களே மகளிர் உரிமை தொகை ரூ.1000 வராதவங்க மேல்முறையீடுக்கு இத பண்ணுங்க.

1.இங்கு <>கிளிக்<<>> செய்து கணக்கு உருவாக்குங்க.

2.அடுத்து, SERVICES-ஐ தேர்ந்தெடுத்து, அதில் KMU-101 KMUT APPEAL பகுதிக்குள் செல்லவும்.

3. ஆதார் எண், ஆண்டு வருமானத்தை பதிவு செய்து மேல்முறையீடு தாக்கல் செய்யுங்க.

தகவல்களுக்கு, உங்கள் பகுதி வட்டாச்சியர்/கோட்டாட்சியரை அணுகவும்.

தெரியாதவர்களுக்கு SHARE பண்ணுங்க.

News December 19, 2025

ஊராட்சி இணைப்பு குறித்து கருத்து தெரிவிக்கலாம் – ஆட்சியர்

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் குறைந்த பரப்பளவு மற்றும் மக்கள் தொகை கொண்டுள்ள பாலமோர் ஊராட்சியை சுருளகோடு ஊராட்சியுடன் இணைத்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது. மேற்படி, மறுசீரமைப்பு தொடர்பாக கருத்துக்கள் இருப்பின் டிச.27ம் தேதிக்குள் கன்னியாகுமரி மாவட்ட ஊரக வளர்ச்சி இயக்குநர் (ஊராட்சிகள்) அலுவலகத்தில் கருத்து தெரிவிக்கலாம் என குமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா இன்று (டிச.19) தகவல் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!