News December 17, 2025

ஜனாதிபதிக்கு பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு!

image

வேலூர் மாவட்டம் அரியூரில் உள்ள ஸ்ரீபுரம் தங்க கோயிலுக்கு இன்று (டிச.17) வருகை தந்த இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு பொற்கோயில் சார்பில் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த வரவேற்பின் போது தமிழக கவர்னர் ஆர்.என். ரவி, மத்திய இணை அமைச்சர் முருகன், தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Similar News

News December 24, 2025

வேலூர்: நண்பனுடன் சென்ற சிறுவனுக்கு நேர்ந்த சோகம்!

image

குடியாத்தம் பகுதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவரது மகன் மாதேஷ் (15). இவர் நேற்று தனது நண்பர் ராகேஷ் என்பவருடன் பைக்கில் சென்றார். கே.வி.குப்பம் மாச்சனூர் அருகே கட்டுப்பாட்டை இழந்து பைக் விபத்து ஏற்பட்டது. 2 பேரையும் மீட்டு அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மாதேஷை பரிசோதித்த டாக்டர்கள், அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News December 24, 2025

வேலூர்: மூதாட்டியிடம் கைவரிசை காட்டிய சிறுவர்கள்!

image

வேலூர்: கொணவட்டத்தை சேர்ந்த சம்ஷத் பேகம் (51), வேலூர் புதிய பஸ் நிலையத்தில், பஸ்சுக்காக காத்திருந்துள்ளார். அப்போது, அவரது பையில் இருந்த ரூ.6 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் திருடு போனது. இதுகுறித்து வேலூர் வடக்கு போலீசில் அவர் புகார் அளித்த நிலையில், அங்கு சுற்றிக்கொண்டிருந்த ஒடிசா மற்றும் ஆந்திராவைச் சேர்ந்த சிறுவர்கள் செல்போனை திருடியது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.

News December 24, 2025

வேலூர்: காவல்துறை இரவு பணி விவரம் வெளியீடு!

image

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் குடியாத்தம், காட்பாடி, கே வி குப்பம், மேல்பட்டி, பேரணாம்பட்டு, அணைக்கட்டு, பள்ளிகொண்டா இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணி செய்து வருகின்றன. அதன்படி இன்று (டிச.23) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.

error: Content is protected !!