News April 29, 2024

தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

image

பாதாள சாக்கடைகளை சுத்தம் செய்ய மனிதர்களை ஈடுபடுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்த முறையை ஒழித்து, இயந்திரங்களை பயன்படுத்துமாறு தமிழக அரசுக்கு யோசனைக் கூறிய கோர்ட், பாதாள சாக்கடையில் இறங்கி உயிரிழப்போருக்கான இழப்பீட்டை 3 ஆண்டுக்கு ஒருமுறை உயர்த்தவும், சுத்தம் செய்யும் போது பலியாவோரின் குடும்பத்திற்கு கருணை வேலை வழங்க வேண்டும் எனவும் ஐகோர்ட் தெரிவித்துள்ளது.

Similar News

News August 23, 2025

Parenting: பிள்ளைக்கு அடிக்கடி உடம்பு சரி இல்லாம போதா?

image

உங்கள் குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி இல்லாததால் அடிக்கடி உடம்பு சரியில்லாமல் போகுதா? அப்போது, இந்த 6 பொருள்களை அவர்களின் உணவு பழக்க வழக்கத்தில் சேர்த்துக்கொள்ளுங்கள். மஞ்சள், சக்கரைவள்ளிக் கிழங்கு, வெள்ளைப்பூண்டு, ப்ரோக்கோலி, காளான், கீரை வகைகளை குழந்தையின் Diet-ல் சேர்த்தால் கட்டாயம் 1 மாதத்தில் அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர். SHARE.

News August 23, 2025

நகை கடன்.. மக்களுக்கு முக்கிய தகவல்

image

வாடிக்கையாளர்கள் கடனை செலுத்த தவறினால் நகைகளை ஏலம் விடுவதே நடைமுறை. அதற்கு முன் உரிமையாளரிடம் முறையாக அறிவித்திருக்க வேண்டும். ஏல இருப்பு விலை(RESERVE PRICE) நகையின் மதிப்பில் 90% இருக்க வேண்டும். 2 ஏலங்கள் தோல்வியுற்ற பிறகு இருப்பு விலையை 85% ஆக குறைக்கலாம். ஏலத்தில் கூடுதலாக கிடைக்கும் தொகையை 7 நாள்களுக்குள் கடன் வாங்கியவரிடம் கொடுக்க வேண்டும். SHARE IT.

News August 23, 2025

அனைவரும் தூய்மை பணிக்கு வர வேண்டும்: திருமாவளவன்

image

அனைத்து சமூகத்தினரும் தூய்மை பணி செய்ய முன்வர வேண்டும் என திருமாவளவன் கூறியுள்ளார். சென்னையில், பணியின்போது மின்சாரம் தாக்கி பலியான தூய்மை பணியாளர் வரலட்சுமியின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் பேசிய அவர், வரலட்சுமியின் குழந்தைகளின் கல்வி செலவை அரசு ஏற்க வேண்டும் எனவும் சென்னையில் விரைவாக மின்சார கேபிள்களை புதை வடிவில் மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

error: Content is protected !!