News April 29, 2024
தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

பாதாள சாக்கடைகளை சுத்தம் செய்ய மனிதர்களை ஈடுபடுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்த முறையை ஒழித்து, இயந்திரங்களை பயன்படுத்துமாறு தமிழக அரசுக்கு யோசனைக் கூறிய கோர்ட், பாதாள சாக்கடையில் இறங்கி உயிரிழப்போருக்கான இழப்பீட்டை 3 ஆண்டுக்கு ஒருமுறை உயர்த்தவும், சுத்தம் செய்யும் போது பலியாவோரின் குடும்பத்திற்கு கருணை வேலை வழங்க வேண்டும் எனவும் ஐகோர்ட் தெரிவித்துள்ளது.
Similar News
News February 2, 2026
திமுகவில் இணைந்தார்.. அன்புமணி அதிர்ச்சி

வன்னியர் பாதுகாப்பு பேரியக்க தலைவர் செந்தில் தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தார். புதுவை திமுக தேர்தல் பொறுப்பாளரும், MP-யுமான ஜெகத்ரட்சகன் ஏற்பாட்டில் இந்த இணைப்பு நடந்துள்ளது. வரும் தேர்தலில் புதுவையில் திமுக- காங்., கூட்டணி ஆட்சியை கைப்பற்ற பல்வேறு வியூகங்களுடன் மாற்றுக் கட்சியினரை தங்கள் வசம் இழுத்து வருகின்றனர். செந்தில் திமுகவில் இணைந்தது அன்புமணி தரப்புக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளதாம்.
News February 2, 2026
தவெகவில் இணைய OPS-க்கு அழைப்பு

அதிமுகவில் இணைய OPS விரும்பினாலும், அதற்கு வாய்ப்பில்லை என EPS திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இந்நிலையில், தவெகவில் OPS இணைய வேண்டும் என அவருடைய ஆதரவாளராக இருந்த ஜேசிடி பிரபாகர் அழைப்பு விடுத்துள்ளார். விரைவில் OPS நல்ல முடிவெடுப்பார் என்று நம்புவதாகவும், அவர் தவெகவிற்கு வருவது தான் நல்ல முடிவாக இருக்கும் எனவும் ஜேசிடி பிரபாகர் கூறியுள்ளார். விஜய்யின் தலைமையை OPS ஏற்பாரா?
News February 2, 2026
வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருக இப்படி வழிபடுங்கள்!

108 எண்ணிக்கையில் ₹1 நாணயங்கள், மாதுளம் பழ முத்துக்களை எடுத்து கொள்ளுங்கள். லட்சுமி படத்திற்கு சந்தனம், குங்குமம் வைத்து, நெய் தீபம் ஏற்றி வையுங்கள். ஒரு ₹1 நாணயத்தையும், ஒரு மாதுளை முத்தையும் எடுத்து, ‘ஓம் ஸ்ரீம் ஸ்ரீயை நமஹ’ என கூறி அர்ச்சனை செய்யுங்கள். இப்படி 108 முறை செய்துவிட்டு, கற்பூர ஆரத்தி காட்டுங்கள். தொடர்ச்சியாக 48 நாள்கள் இந்த வழிபாட்டை செய்தால், வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகும்.


