News December 17, 2025
தேனியில் பெண்ணுக்கு கொலை மிரட்டல்!

கண்டமனூர் பகுதியை சேர்ந்தவர் சிவஜோதி. இவரது கணவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ராகேஷ் என்பவரது குடும்பத்தினருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக நேற்று முன்தினம் சிவஜோதி வீட்டிற்கு சென்ற ராகேஷ் அவரது உறவினர் வெற்றி ஆகியோர் சிவஜோதியிடம் ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்த புகாரில் கண்டமனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது (டிச.16) செய்தனர்
Similar News
News January 17, 2026
தேனி: நிலம் வாங்கியவர்கள் கவனத்திற்கு..!

அனுமதியற்ற மனைப்பிரிவு வரமுறைப்படுத்தும் திட்டத்தின் கீழ், தேனி மாவட்டத்தில் தனிமனை வாங்கிய பொதுமக்கள் <
News January 17, 2026
ஜன.20-ல் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

தேனி மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில், மேற்பார்வை பொறியாளர் லட்சுமி தலைமையில் மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் ஜன.20 (செவ்வாய்) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் தேனி, போடி மற்றும் ராசிங்காபுரம் மின் உபகோட்டங்களை சேர்ந்த மின் நுகர்வோர்கள் பங்கேற்று தங்கள் குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என மின்வாரியத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
News January 17, 2026
தேனி: போலி நகை அடகு வைத்து பல லட்சம் மோசடி..

பெரியகுளத்தில் உள்ள TMB-யில் திண்டுக்கலை சேர்ந்த சரவணக்குமார், இவரது நண்பர் ஆனந்தகுரு இணைந்து 30 பவுன் நகைகளை அடகு வைத்து ரூ.17 லட்சம் கடன் பெற்றனர். கடன் தேதி முடிந்ததும் நகைகளை திருப்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த வங்கி மேலாளர் விவேக் சோதனை செய்ததில் நகைகள் போலி என தெரியவந்தது. இதுகுறித்து விவேக் அளித்த புகாரின் பேரில் தென்கரை போலீசார் வங்கி நகை மதிப்பீட்டாளர் விக்னேஷ் உட்பட 3 பேரை கைது செய்தனர்.


