News December 17, 2025
ரூ.1 லட்சம் பரிசு: அறிவித்தார் கோவை கலெக்டர்

கோவையில் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முன்மாதிரியான பங்களிப்பை செய்த நிறுவனங்கள், தனிநபா்கள் பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பிக்கலாம். அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் விருது பெறும் 100 தனிநபா்கள், நிறுவனங்களுக்கு தலா ரூ.1 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும். இதற்கான விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வரும் ஜனவரி.20-ம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
Similar News
News December 24, 2025
கோவை: உங்க பைக், காருக்கு FINE இருக்கா?

கோவை மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். இங்கு <
News December 24, 2025
ரயில் பயணிகள் கவனத்திற்கு

சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் நேற்று விடுத்த செய்தி குறிப்பில், கிறிஸ்துமஸை முன்னிட்டு பெங்களூரில் இருந்து டிச.24 மாலை புறப்படும் பெங்களூரு – கண்ணூா் சிறப்பு ரயில் மறுநாள் காலை கண்ணூரை சென்றடையும். மறுமாா்க்கமாக கண்ணூரில் இருந்து டிச.25 காலை புறப்படும் கண்ணூா் – பெங்களூரு சிறப்பு ரயில் அன்றிரவு பெங்களூரை சென்றடையும். இந்த ரயிலானது போத்தனூர் வழியாக இயக்கப்படும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 24, 2025
கோயம்புத்தூரில் கத்திக்குத்து

கோவையைச் சேர்ந்த தனசேகர். தனியார் நிறுவன ஊழியர். இவர் பணிபுரியும் அதே நிறுவனத்தில் செந்தில்குமார் (42) என்பவரின் மனைவி வேலை செய்தார். அவர் கணவர் செந்தில்குமார், போதையில் டார்ச்சர் செய்வதாக, தனசேகரிடம் கூறியுள்ளார். அவருக்கு தனசேகர் ஆறுதல் கூறி வந்தநிலையில், இருவருக்கும் தொடர்பு இருப்பதாக கூறி தனசேகரை செந்தில்குமார் கத்தியால் குத்தியுள்ளார். பின் போலீசார் செந்தில்குமாரை கைது செய்தனர்.


