News April 29, 2024
சீரான குடிநீர் விநியோகம் பணிகள் குறித்து ஆய்வு கூட்டம்

கிருஷ்ணகிரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில், ஊரகப் வளர்ச்சி துறை சார்பாக நடைபெற்று வரும் திட்ட பணிகள் மற்றும் கோடைக் காலத்தை முன்னிட்டு சீரான குடிநீர் விநியோக பணிகள் குறித்தும் மாவட்ட ஆட்சியர் தலைவர் கே.எம் சரயு இ.ஆ.ப அவர்கள் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. உடன் கூடுதல் ஆட்சியர் வந்தனா இ.ஆ.ப அவர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் கலந்து கொண்டார்கள்.
Similar News
News October 16, 2025
கிருஷ்ணகிரி: இரவில் வெளியே செல்வோர் கவனத்திற்கு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. வேலை செல்லும் பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க
News October 16, 2025
கிருஷ்ணகிரி மக்களே நாளை மிஸ் பண்ணிடாதீங்க

கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. அதன்படி வரும் அக்.17ஆம் தேதி காலை 10.00 மணி முதல் 1.30 மணி வரை நடைபெற உள்ளது. இம்முகாமில் 10th,12th, டிப்ளமோ, ஐடிஐ முடித்தோர், மற்றும் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு 04343-291983 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும். *நண்பர்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க*
News October 16, 2025
கிருஷ்ணகிரியில் இப்படி ஒரு இடமா!

கிருஷ்ணகிரி, குருபரப்பள்ளி அருகே மல்லச்சந்திரம் மோரல்பாறையின் மீது கற்திட்டைகள் உள்ளன. இவை இறந்தவர்களின் நினைவாக சுமார் 2000-3000 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டிருக்கலாம் என தொல்லியல் துறையினர் கருதுகின்றனர். இவை 1மீ முதல் 2.6மீ வரை உயரம் கொண்டதாக உள்ளது. இவற்றில் சில ஓவிங்களும் காணப்படுகின்றன. நம்ம ஊரில் இப்படி ஒரு இடம் இருப்பது பலருக்கும் தெரியவில்லை. ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.