News December 17, 2025

குமரியில் நாளை இங்கெல்லாம் மின்தடை!

image

செம்பொன்விளை, சேரமங்கலம், முட்டம்  ஆகிய துணை மின் நிலையங்களில்  நாளை (டிச.18) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் செம்பன்விளை, திக்கணங்கோடு, இரணியல், திங்கள்சந்தை, முட்டம், அம்மாண்டிவிளை, சாத்தன்விளை, திருநயினார்குறிச்சி, மணவாளக்குறிச்சி, நெய்யூர், சைமன்காலனி ஆகிய இடங்களுக்கும் அதனை சுற்றியுள்ள துணை கிராமங்களுக்கும் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது. SHARE IT

Similar News

News December 25, 2025

ரெயில் மீது கல்வீசிய சிறுவன் கைது

image

காந்திதாம் – திருநெல்வேலிக்கு வாரம் ஒரு முறை இயக்கப்படும் ஹம்சபர் ரயில் நாகர்கோவில் டவுன் ரயில் நிலையம் அருகே வந்த போது 16 வயது சிறுவன் ஒருவன் ரயில் பெட்டி மீது கல் வீசியதாக கூறப்படுகிறது. இது குறித்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த சிறுவனை கைது செய்தனர். பின்னர் அந்த சிறுவன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு நெல்லையில் உள்ள சிறார் பள்ளியில் சேர்க்கப்பட்டார்.

News December 25, 2025

கன்னியாகுமரியில் மட்டும் 23,043 பேர் பாதிப்பு

image

தமிழகத்தில் இந்தாண்டு 5.05 லட்சம் பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதில் கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் சுமார் 21,454 பேர் நாய்கடிக்கு ஆளாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நாய்க்கடியால் பாதிக்கப்பட்டவர்கள், அதனை அலட்சியப்படுத்தாமல், கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ள தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

News December 25, 2025

குமரியில் ரயில் தண்டவாளத்தில் கிடந்த சடலம்!

image

குழித்துறை ரயில் நிலையம் அருகில் தண்டவாளத்தில் நேற்று சுமார் 45 வயது நபர் ஒருவர் இறந்து கிடந்தார். நாகர்கோவில் ரயில்வே போலீசார் அவரது உடலைக் கைப்பற்றி அரசு மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைத்து இறந்தவர் யார்? என விசாரித்து வருகின்றனர். மேலும், இறந்தவர் கையில் தேர்தலுக்கு வாக்களித்த மை காணப்பட்டதால் கேரளாவில் சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் வாக்களித்தவராக இருக்கலாம் என போலீசார் கூறினர்.

error: Content is protected !!