News December 17, 2025
மயிலாடுதுறை மாவட்டத்தில் மின் தடை அறிவிப்பு!

மயிலாடுதுறை மாவட்டம் கடலங்குடி, குத்தாலம் துணை மின் நிலையங்களில் இன்று பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இங்கிருந்து மின்சாரம் பெரும் பகுதிகளான குத்தாலம்டவுன், குத்தாலம் தேரடி, மாதிரி மங்கலம், கடலங்குடி, வானதிராஜபுரம், சோழம்பேட்டை, மாப்படுகை, கோழிக்குத்தி, முருகமங்கலம், திருமணஞ்சேரி, ஆலங்குடி ஆகிய பகுதிகளில் காலை 9 மணியில் இருந்து மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படவுள்ளது. ஷேர் பண்ணுங்க
Similar News
News December 21, 2025
மயிலாடுதுறை: போக்குவரத்து மாற்றம்

நீடூர்-மயிலாடுதுறை சாலையில் உள்ள ரெயில்வே கேட்டில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் இன்று காலை 8 – 5 மணி வரை ரெயில்வே கேட் மூடப்படவுள்ளது. எனவே இதற்கு பதிலாக, நீடூர் ரெயில்வே கேட் அருகில் உள்ள நீடூர் பாவா நகர்-ஆனந்ததாண்டவபுரம்- மயிலாடுதுறை, கடுவங்குடி- ஆனந்ததாண்டவபுரம் – மயிலாடுதுறை, அருண்மொழித்தேவன் – மகாராஜபுரம்-மாப்படுகை-மயிலாடுதுறை ஆகிய வழித்தடங்களை பயன்படுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
News December 21, 2025
மயிலாடுதுறை: ஆற்றில் மிதந்த குழந்தையின் சடலம்!

மயிலாடுதுறை நகரின் மையப்பகுதியில் காவிரி ஆற்றில் புதுப்பாலத்தின் மேற்கு புறம் பெரிய பிளாஸ்டிக் பையில் குழந்தை ஒன்று மிதந்து வந்தது. இதனை கண்ட மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மிதந்து வந்த பிறந்து 4 நாட்களே ஆன குழந்தையை மீட்டனர். இதில் உள்ளே இருந்த பச்சிளம் பெண் குழந்தை இறந்து விட்டது என தெரியவந்தது. மேலும் இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்
News December 21, 2025
மயிலாடுதுறை: ஆற்றில் மிதந்த குழந்தையின் சடலம்!

மயிலாடுதுறை நகரின் மையப்பகுதியில் காவிரி ஆற்றில் புதுப்பாலத்தின் மேற்கு புறம் பெரிய பிளாஸ்டிக் பையில் குழந்தை ஒன்று மிதந்து வந்தது. இதனை கண்ட மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மிதந்து வந்த பிறந்து 4 நாட்களே ஆன குழந்தையை மீட்டனர். இதில் உள்ளே இருந்த பச்சிளம் பெண் குழந்தை இறந்து விட்டது என தெரியவந்தது. மேலும் இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்


