News December 17, 2025
திண்டுக்கல் அருகே விபத்து சம்பவ இடத்திலேயே பலி!

வேடசந்தூர் – ஒட்டன்சத்திரம் சாலையில், சாய்பாரத் கல்லூரி அருகே நேற்று ஈச்சர் லாரி ஒன்று இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில், பைக்கில் சென்ற வாலிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த வேடசந்தூர் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று, உயிரிழந்த வாலிபரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News December 25, 2025
திண்டுக்கல் மக்களே இனி அலைச்சல் வேண்டாம்!

மக்களே பல்வேறு அரசு சேவைகளைப் பெறவதற்காக இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம்
ஆதார் : https://uidai.gov.in/
வாக்காளர் அடையாள அட்டை: eci.gov.in
பான் கார்டு : incometax.gov.in
தனியார் வேலைவாய்ப்பு : tnprivatejobs.tn.gov.in
ஓட்டுநர் உரிமம் – https://parivahan.gov.in/
பட்டா தொடர்பான விவரங்களுக்கு – eservices.tn.gov.in
இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
News December 25, 2025
வத்தலகுண்டு: நட்பாக பழகி மோசடி இளம் பெண் கைது!

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியைச் சேர்ந்த முருகவேல்–செல்வி தம்பதியினருக்கு, மதுரை திருநகரைச் சேர்ந்த ஆரோக்கியமேரி என்பவர் ஒரு கோயிலில் அறிமுகமாகியுள்ளார். பின்னர் அவர்களின் வீட்டுச் சாவியைத் திருடி 15½ பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளார். இது குறித்து முருகவேல் அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார் ஆரோக்கியமேரயை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
News December 25, 2025
திண்டுக்கல்: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

திண்டுக்கல் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


