News December 17, 2025
தஞ்சை: சிகிச்சைக்கு செல்லும் வழியில் மூச்சு திணறி பலி

பாபநாசம் அருகே தென்னஞ்சோலை பகுதியைச் சேர்ந்த ஜீவானந்தம், உடல்நிலை பாதிக்கப்பட்ட தனது மனைவி குணவதியை சிகிச்சைக்காக காரில் அழைத்து செல்லும் வழியில் மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் பாபநாசம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில், மேல் சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் காரிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
Similar News
News December 26, 2025
தஞ்சை: VAO லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை கிராம நிர்வாக அலுவலரின் (விஏஓ) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் விஏஓ யாரேனும் உங்களிடம் லஞ்சம் கேட்டால், தஞ்சை மாவட்ட மக்கள் 04362-227100 என்ற எண்ணில் தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!
News December 26, 2025
தஞ்சை: பணம் வைத்து சூதாடிய 6 பேர் மீது வழக்கு

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே குலமங்கலம் மாரியம்மன் கோயில் பகுதியில் சூதாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்த போலீசார் சூதாட்டத்தில் ஈடுபட்ட கவியரசன்(48), திருநாவுக்கரசு(38), பிரசாந்த்(34), ரமேஷ்(39), வசந்தகுமார்(36), நித்துவான்(34) ஆகிய 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.10,900 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
News December 26, 2025
தஞ்சை: ரோடு சரியில்லையா? சரி செய்ய எளிய வழி!

தஞ்சை மக்களே, உங்கள் பகுதியில் உள்ள சாலைகள் குண்டும் குழியுமாக இருக்கிறதா? இதுகுறித்து யாரிடம் புகார் அளிப்பது என்றும் தெரியவில்லையா? கவலை வேண்டாம். ‘<


