News December 17, 2025
காலையில் எழுந்தவுடன் இந்த தப்பை பண்ணாதீங்க

ஸ்மார்ட் போன் பயன்படுத்தும் 80% பேர் தினமும் காலையில், குறைந்தபட்சம் 15 நிமிடங்களாவது படுக்கையில் மொபைல் பார்ப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆனால் இந்த பழக்கம் நமக்கே தெரியாமல் நமது உடல் மற்றும் மனநலத்துக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். அதாவது, நாளடைவில் கவனச்சிதறல் அதிகரிப்பு, மன அழுத்தம், தலைவலி, பார்வையில் பாதிப்பு உள்ளிட்ட பிரச்சனைகள் இதனால் ஏற்படுமாம். SHARE IT
Similar News
News April 8, 2026
கல்லூரியில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி

இராமநாதபுரம் செய்யது அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திவ்யான்ஷீ நிகம், கல்லூரி மாணவிகளுடன் வாக்காளர் விழிப்புணர்வு செல்பி புகைப்படம் எடுத்து கொண்டார். உடன் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க மாவட்ட திட்ட இயக்குநர் பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
News April 8, 2026
காஞ்சிபுரம்: மக்களே வீட்டில் வோல்டேஜ் பிரச்சனையா?

காஞ்சிபுரம் மக்களே, வோல்டேஜ் பிரச்சனையா? EB ஆபிஸ் எங்கு இருக்கிறது என்று தேடி அலைய வேண்டாம். வீட்டில் இருந்தே WHATSAPP மூலம் 94458 50811, 9443111912 இந்த நம்பரில் புகைப்படத்துடன் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். மேலும், கால் செய்து புகார் அளிக்க, 94987 94987 இந்த நம்பரை தொடர்பு கொள்ளலாம். அதிக பயனுள்ள இந்த தகவலை தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
News April 8, 2026
உண்மையான காங்கிரஸ் தவெக பக்கம் உள்ளது: விஜய்

தவெகவிற்கு ஆதரவாக சில தமிழக காங்., தலைவர்கள் கருத்து தெரிவிப்பது பற்றி விஜய் முதல்முறையாக பேசியுள்ளார். கோடி கோடியாக கொடுத்து தமிழக காங்.,ஐ ஸ்டாலின் தனது பையில் போட்டுக் கொண்டதாகவும் என நெல்லை பரப்புரையில் அவர் விமர்சித்தார். அதேநேரம், உண்மையான காங்., தவெக பக்கம் உள்ளதாகவும் கூறினார். பல பொய்களையும் புரட்டுகளையும் திமுக ஏவி வருவதாகவும் அவர் மேலும் சாடினார்.


